வெள்ள பாதிப்புகளை முன் கூட்டியே ஸ்மார்ட்போன்களில் அறிய முடியும்.!
ஸ்மார்ட் போன்களில் வெப்பநிலை, காற்றழுத்தம் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வெள்ளம் போன்ற பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் வானிலையை முன் கூட்டியே கண்டறிய
ஸ்மார்ட் போன்களில் வெப்பநிலை, காற்றழுத்தம் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வெள்ளம் போன்ற பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் வானிலையை முன் கூட்டியே கண்டறிய முடியும்.
வெள்ளம் மற்றும் இதர இயற்கை பேரழிவுகளை முன் கூட்டியே கண்டறிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள்:
டெல் அவிப் பல்கலைக்கழக பேராசிரியர் காலின் பிரைஸ் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது:
நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள சென்சார்கள் நம் சுற்றுச்சூழல் மற்றும் ஈர்ப்பு விசை மற்றும் புவியின் காந்தபுலன், காற்றழுத்தம், வெப்பநிலைகள், ஒலி அளவுகள் மற்றும் பலவற்ற தொடர்ந்து டிராக் செய்து வருகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

உலகம் முழுக்க 400 கோடி ஸ்மார்ட் போன்கள்:
உலகம் முழுக்க சுமார் 300 முதல் 400 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்த தகவல் கொண்டு வானிலையை மிக துல்லியமாக டிராக் செய்து மற்ற இயற்கை பேரழிவுகளை முன் கூட்டியே கணிக்க முடியும் எனவும் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

வெதர் சிக்னல் செயலி:
ஆய்வில் ஒரு பகுதியாக நான்கு ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் வைத்து அதன் டேட்டாவை கொண்டு சூறாவளி போன்ற கணிக்க பயன்படுத்தினர். இவை கடலிலல் ஏற்படும் புயலுக்கு இணையானது. இவற்றுடன் லண்டனை சேர்ந்த வெதர்சிக்னல் எனும் செயலியையும் பயன்படுத்தினர்.

முன்கூட்டியே ஆபத்தான பகுதிகளை காணலாம்:
ஸ்மார்ட்போன்களால் வானில அறிக்கையை உடனுக்குடன் வழங்க கூடிய நிலையில், மக்கள் வானிலை விவரங்களை க்ளவுட் மூலம் செயலியில் அதனை தெரிந்து கொள்கின்றனர். இந்த தகவல்களை கொண்டு ஆபத்தான் பகுதிகளை கண்டறிந்து அவர்களுக்கு முன்கூட்டியே வழங்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications