சிங்கிள்ஸ் கவலையை விடுங்க! இனி உய்யாலாலா தான்! டேட்டிங் வந்தாச்சு.!
கீழே விழுந்து அழுது பிரண்டாலும் நமக்கு யாரும் கிடைக்கமாட்டனு சொல்லி மற்றவர்கள் நம்மளை கடுப்பு ஏத்தறாங்க. இப்படி எல்லாம் நம்மளை சிலர் ஒதுக்க நினைச்சு இருக்கலாம். தற்போது தனிமையில் தவிக்கும் இளைஞர்களு
வயது 18க்கு மேல ஆச்சு. ஆன இன்னைக்கு வரைக்கு தனக்கு எந்த ஆளும் இல்லை. என்ஜாய் பண்ண நேரமும் இல்லை. தனிமையின் தவிப்பும் பாடாய் படுத்துகின்றது. எனக்கு ஏற்ற ஜோடியும் இல்லை.
நமக்கு வெளியில் கேல் பிரண்டு இல்லைனு சொல்லவும் கூச்சம், இருக்குதுனு சொல்லவும் கூச்சம் என்ன பண்ண இந்த வயது வேற அப்படி இப்படி இருக்கத்தான் செய்யுது.

கீழே விழுந்து அழுது பிரண்டாலும் நமக்கு யாரும் கிடைக்கமாட்டனு சொல்லி மற்றவர்கள் நம்மளை கடுப்பு ஏத்தறாங்க. இப்படி எல்லாம் நம்மளை சிலர் ஒதுக்க நினைச்சு இருக்கலாம்.
தற்போது தனிமையில் தவிக்கும் இளைஞர்களுக்காக பேஸ்புக் விரும்பியவர்களுடன் டேட்டிங் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இளைஞர்களின் ரசணை:
இளைஞர்களில் இன்று ஆண், பெண் பேதம் இல்லாமல் தனக்கு வேண்டியவர்களை இணையாக தேர்வு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர்களின் பெரும்பாலானோர் இன்று வரை சிங்கிள்ஸ் ஆகவே இருக்கின்றனர். இவர்கள் மற்றவர்களை போல ஜாலியாக தனது இணையுடன் வலம் வர வேண்டும் என்று காத்து கிடக்கின்றனர். ஆனால் இன்று வரை இந்தியாவில் அவர்களுக்கு முடியாமல் போகியுள்ளது.

ஏற்ற ஜோடி இல்லையே என்று ஏக்கம்:
தங்களுக்கு ஏற்ற ஜோடி இல்லையே என்று சிங்கிள்ஸ் கவலைப்பட்டு வருகின்றனர். தாங்கள் இருக்கும் ஏரியாவிலும் பெண்களோடு, இல்லை ஆண்ளோடு இது குறித்து பேச அவர்கள் கூச்சப்பட்டும் வருகின்றனர். அவர்கள் தனிமையை இவ்வாறு இனிமையாக இணையுடன் கொண்டாட வேண்டும் என்றும் இத்தனை நாட்களாக ஏங்கி வந்தனர்.

சுதந்திரமாக தேர்வு செய்யுங்க:
இனிமேல் நாம் நமக்கு ஏற்ற இணையை சுதந்திரமாக தேர்வு செய்ய முடியும். இதுநாள் வரையில் நமக்கு யாரும் இல்லை என்று தேர்வு காத்து இருந்த பொழுதுகள் இனி நமக்கு வசந்த காலத்தை தற்போது வரவேற்றும் விதமாக பேஸ்புக் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாம் இனி யாருடன் வேண்டும் ஆனாலும் டேட்டிங் செய்யலாம்.

கொலம்பியாவில் அறிமுகம் செய்தது:
இளைஞர்கள் தங்கள் இணையை இணையத்தளம் மூலம் கண்டுபிடிக்க பல்வேறு செயலிகள் உள்ளன. இவற்றில் உள்ளே நுழைய ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பது அவசியம். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையை முதல்முறையாக கடந்த செப்டம்பர் மாதம் சோதனை முறையில் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியது.

தாய்லாந்து, கனடாவில் சேவை:
இதன் தொடர்ச்சியாக, இதே டேட்டிங் சேவையை கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சோதனை முறையில் பேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது. அங்கு தனிமையில் தவித்த தற்போது ஓரே குஷியாகவும் இருக்கின்றனர்.

இனி உய்யாலால தான்:
இந்த சேவை மூலம், பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உரையாடவும், தங்கள் இணைகளை தேர்வு செய்யவும் முடியும். இந்த சேவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்தியாவுக்கு விரைவில் வருகின்றது:
இந்தியாவுக்கு இந்த வசதி விரைவிலேயே வர இருக்கின்றது. இதனால் தனிமையில் தவித்த சிங்கிள்ஸ்களுக்கு தற்போது பேஸ்புக்கில் ஜாலியாக ஜோடியை தேர்வு செய்து ரோட்டிலும், பார்க்கிலும் கட்டிப்பிடித்து ஹாயாக வலம் வரலாம்.


Click it and Unblock the Notifications