இரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ள உதவும் செயலி.!
நம்முடைய இரத்த அழுத்தத்தை மிகச் சரியாக தெரிந்து கொள்ள உதவும் வகையில் விஞ்ஞானிகள் ஒரு புதிய ஹார்டுவேர் மற்றும் ஸ்மார்ட்போன் செயலியை கண்டுபிடித்துள்ளனர்.
நம்முடைய இரத்த அழுத்தத்தை மிகச் சரியாக தெரிந்து கொள்ள உதவும் வகையில் விஞ்ஞானிகள் ஒரு புதிய ஹார்டுவேர் மற்றும் ஸ்மார்ட்போன் செயலியை கண்டுபிடித்துள்ளனர். மிக்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று இரத்த அழுத்தத்தை மிக மிக சரியாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு அளவீட்டு கருவியை கண்டுபிடித்துள்ளனர். மற்ற இரத்த அழுத்த கருவிகளை விட மிக துல்லியமாக அதே நேரம் நம் கைவிரலில் சொடுக்கி தெரிந்து கொள்ளும் வகையிலான இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய பயனை தரும்.
இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து பி.எச்.டி மிக்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பி.எச்.டி மாணவர் ஆனந்த் சந்திரசேகர் என்பவர் கூறியபோது, 'நாங்கள் ஒரு மிகத்துல்லியமான அளவீட்டு கருவியை விரல் நுனியில் சொடுக்கி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்பால் நாங்கள் பூரித்து போயுள்ளோம். இந்த கண்டுபிடிப்பு இரத்த அழுத்ததை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிக எளிதாக மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சந்திரசேகர் மேலும் கூறியுள்ளார்.

இந்த கருவி வேலை செய்வது எப்படி?
இந்த செயலி இரண்டு சென்சார்களை பயன்படுத்துகிறது: ஒன்று ஆப்டிகல் மற்றொன்று ஒரு சக்தி. ஆப்டிகல் சென்சார், சக்தி சென்சாரின் மேல்பகுதியில் இருக்கும். இவை இரண்டும் ஃபோன் பின்புறத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சென்டிமீட்டர்-தடிமனான அலவில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய அலகு உள்ள சக்தி சென்சார் மேல் உள்ளது.

சென்சார் :
இதை உபயோகப்படுத்துபவர்கள் இந்த செயலியை ஆன் செய்துவிட்டு பின்னர் தங்கள் விரலை சென்சார்களுக்கு மேல் வைக்க வேண்டும். விரலை சென்சார் மீது வைத்தவுடன் இதயத்துடிப்பு லெவலை பார்க்கலாம், மேலும் அதே நேரத்தில் திரையில் சரியான இரத்த அழுத்த அளவையும் பார்க்கலாம்.

மிக்சிகன் ஸ்டேட் :
மிக்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராமகிருஷ்ண முக்காமலா அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ' இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் சரியான அழுத்தத்தில் தங்களுடைய விரல்களை அழுத்தி வைத்தால் சரியான ரத்த அழுத்தம் குறித்த அளவு கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் முதல் ஒருசில முயற்சியிலேயே இந்த செயலியை 90% பேர் சரியாக பயன்படுத்த கற்று கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

7.5 மில்லியன்:
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி உலகில் நடைபெறும் இறப்புகளில் 12.8% பேர் அதிக ரத்த அழுத்தத்தால் மரணம் அடைவதாகவும், வருடம் ஒன்றுக்கு இந்த ஒரே காரணத்தினால் மட்டும் 7.5 மில்லியன் பேர் தங்கள் இன்னுயிரை இழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக இரத்த அழுத்தம் தான் இதயநோய் மற்றும் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாகிறது. மேலும் ஒருசில இதயநோய்கள், சிறுநீரக நோய், சிறுநீரக செயலிழப்பு, விழித்திரை இரத்த அழுத்தம் மற்றும் பார்வை குறைபாடு. 140/90 mmHg க்கு குறைவாக இருக்கும் வரை இதய அழுத்தம் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் சிகிச்சை இதய நோய் சிக்கல்களில் குறைப்பு தொடர்புடையது அனைத்தும் அதிக ரத்த அழுத்தத்தால் வருபவை ஆகும்.

வாழ்க்கை முறை:
இந்த நோய்களுக்கான முக்கிய சிகிச்சை தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுதல் மற்றும் தியானம் ஆகியவை தான். ஆனால் இந்த நோயை வெறும் 20% மக்கள் மட்டுமே வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய செயலி ஒவ்வொருவரும் தங்களுடைய இரத்த அழுத்தத்தை தினந்தோறும் பார்த்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வதால் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இதனால் எடுத்து கொள்ளப்படும் மருந்துகளின் அளவும் குறைய வாய்ப்பு உள்ளது.


கார்ப்பரேட் சென்சார் பல்ஸ்:
இந்த செயலி அனைவருக்கும் ஒரு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த கார்ப்பரேட் சென்சார் பல்ஸ், ஆக்ஸிஜன் செறிவு இரத்த அழுத்த அளவீட்டு உள்ளிட்ட புதிய மருத்துவ மேம்படுத்தல்கள் தேவைப்படலாம். இந்த செயலி நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் மற்றும் நம்முடைய எதிர்காலமும் பிரகாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications