இனி ரயில் டிக்கெட் பணம் செலுத்த ஈசி வழி: தட்கலும் பண்ணிக்கலாம்.!
இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐஆர்சிடிசி செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமெண்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும் என போன்பெ நிறுவனத்தின் கா
இந்திய ரயில்வேயில் ஐஆர்சிடிசி உடன் இணைவதாக போன்பெ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இனிமேல் ஐஆர்டிசிடிசி ரயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலிலில் எளிதாக பணம் செலுத்தலாம்.

ஒரு கோடி பயனாளர்கள்:
போன்பெ செயலியை பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி பயனர்கள் யுபிஐ கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் போன்பெ வாலெட் பயன்படுத்தி தங்கள்து வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்:
இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐஆர்சிடிசி செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமெண்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும் என போன்பெ நிறுவனத்தின் கார்த்திக் ரகுதிபதி தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியளிக்கின்றது:
ஐஆர்டிசியுடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது. மேலும் பயனாளர்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் நன்மைகளை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்கும் என்று கார்த்திக் ரகுதிபதி தெரிவித்துள்ளார்.

தட்கல் டிக்கெட் பதிவு:
ஐஆர்சிடிசி சார்பில் இ-வாலெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தட்கல் டிக்கெட்களை ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

வேகமாக டிக்கெட் பதிவு:
இ-வாலெட் சேவையில் பயனர்கள் முன் கூட்டியே பணத்தை சேர்த்து வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மொபைல் வாலெட் போன்றே இந்த பணம் கொண்டு டிக்கெட் முன்பதிவு பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications