புதிய திட்டம்: பேமெண்டெ செயலி மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஸ்மார்ட்போன் மற்றும் செயலிகள் அதிகப்படியான வளர்ச்சியடைந்துள்ளது. இதேபோல் ஸ்மார்ட்போன் நமது வாழ்க்கையின் இன்றியமையாத சாதனமாகவும் மாறியுள்ளது என்றே கூறலாம்.

ஆப்பிள் பே சேவையை கொண்டு மக்கள் எவ்வித கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு உதவியின்றி பணம் எடுக்க முடிகிறது. அமெரிக்கா முழுக்க வாடிக்கையாளர்கள் சுமார் 5000க்கும் அதிகமான வெல்ஸ் ஃபார்கோ ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும்.
இதை செயல்படுத்த ஆப்பிள் பே செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது போனின் வேலெட்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன்பின் பண பரிவர்த்தனைகளை என்எஃப்சி தொழில்நுட்பம் மூலம் ஏடிஎம்களில் மேற்கொள்ள முடியும்.

இம்முறை வெளியிடப்பட்டுள்ள ஒன்-டைம் அக்சஸ் கோடு தொழில்நுட்பம் மூலம் சுமார் முப்பது லட்சத்திற்கும் அதிகமான வெல்ஸ் ஃபார்கோ ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் அக்சஸ் கோடு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
கார்டு இல்லாத ஏடிஎம்களில் என்எஃப்சி தொழில்நுட்பம் அறிமுகம் செய்வதால் மேலும் பலர் பயன்பெறுவர் என கம்யூனிட்டி பேங்க் அதிகாரியான ஜொனாதன் வெலைன் தெரிவித்தார். என்எஃப்சி தொழில்நுட்பம் கார்டு-லெஸ் அக்செஸ் செய்வதில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பண பரிவர்த்தனை செய்ய மொபைல் வாலெட் சேவையை பயன்படுத்த முடியும். வெல்ஸ் ஃபார்கோ வாலெட் ஃபார் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பே, ஆண்ட்ராய்டு பே அல்லது சாம்சங் பே உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். என்எஃப்சி வசதி கொண்ட ஏடிஎம் சென்று மொபைல் போன் அல்லது அணியக்கூடிய சாதனத்தை கொண்டு பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
அமெரிக்காவில் தற்சமயம் மொபைல் பேமெனட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கான புரட்சி துவங்கியுள்ள நிலையில் மற்ற நாடுகளிலும் இது துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலனோர் தங்களது மொபைல்போன் கொண்டு நிதி மேம்பாடு மற்றும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications