பேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.!
பேடிஎம் செயலி கொண்டு வந்த இந்த திட்டம் நாடு முழுவதும் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது உணவு ஆர்டர் செய்ய பல்வேறு புதிய செயலிகள் வந்துவிட்டது, இந்த செயலிகளில் உணவு ஆர்டர் செய்தால் குறிப்பிட்ட நேரங்களில் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவரிசையில் பேடிஎம் செயலி மூலம் உணவு ஆர்டர்
செய்யும் வசதியைக் கொண்டு வந்துள்ளது.

இந்த அறிவிப்பை பேடிஎம் நிறுவனம் நேற்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜொமேட்டோ உடன் இணைந்து பேடிஎம் இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பேடிஎம் செயலி
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் பேடிஎம் செயலி மூலம் உணவு முதற்கட்டமாக அளிக்கப்பட
உள்ளது, இந்த சேவை முதலாவதாக டெல்லியில் மட்டும் செயல்படுத்த உள்ளது பேடிஎம் நிறுவனம்.

உணவு ஆர்டர்
விரைவில் நாடு முழுவதும் இந்த புதிய திட்டத்தை கொண்டு வர பேடிஎம் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது, ஜொமேட்டோ நிறுவனமும் புதிய முயற்சியாகக் கூடுதலாக 30நகரங்களில் இந்த உணவு ஆர்டர் சேவையை விரிவு செய்கிறது.

80ஆயிரம் உணவகங்கள்
இந்த மாதம் இறுதிக்குள் நாட்டில் உள்ள 100நகரங்களைச் சேர்ந்த 80ஆயிரம் உணவகங்கள் உடன் பேடிஎம் இணைந்து இந்த உணவு ஆர்டர் சேவையைக் கொண்டு வர உள்ளது.

கேஷ்பேக் ஆஃபர்
பேடிஎம் செயலி கொண்டு வந்த இந்த திட்டம் நாடு முழுவதும் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு தொடக்க விழா ஆஃபராக பேடிம் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்க்கான
கேஷ்பேக் ஆஃபர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications