Just In
- 50 min ago எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- 2 hrs ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 3 hrs ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 5 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
Don't Miss
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒவ்வொரு பேடிஎம் பயனர்களுக்கும் பாதிப்பா.? ஏன்.? எதனால்.? எப்படி.?
இது பாரம்பரிய வங்கிகளுடன் போட்டியிடும் வண்ணம் உள்ளது என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் மக்கள் மீது எம்மாதிரியான தாக்கங்களை இது ஏற்படுத்தும்.?
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் ஆனது பேடிஎம் பயன்படுத்தும் அனைவரையும் பாதிக்கும் என்றும், பணபரிமாற்றத்தை குழப்பும் என்றும் பீதிகள் எழுந்த வண்ணம் உள்ளன.
நமது பிரதானமான பேடிஎம் ஆப் ஆனது ஒரு பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியாக அறிமுகமாகி பேடிஎம் ஆப்பில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. இந்த சேவை மூலம் நிறுவனம் டெபிட் கார்டுகளைத் தொடங்குவதோடு சேமிப்புக் கணக்குகளில் வட்டி விகிதங்களையும் வழங்குகின்றன. இது பாரம்பரிய வங்கிகளுடன் போட்டியிடும் வண்ணம் உள்ளது என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் மக்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்துமா.? பாதிப்புகளை உண்டாகுமா.? என்பதை பற்றிய தொகுப்பே இது.
பிரதான மாற்றம் என்ன.?
உங்களின் பேடிஎம் பணப்பையை மே 23-க்குப் பிறகு பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிமிட் (பிபிபிஎல்) ஆக மாற்றி அமைக்கப்படும். ஆனாலும் உங்கள் பணப்பை எப்போதும் போன்றே செயல்படும்.
பேடிஎம் பணப்பையில் என்னென்ன மாற்றங்கள்.?
எந்த மாற்றமும் இல்லை. பணப்பை வணிக நிறுவனம் பிபிபிஎல் நிறுவனத்திற்கு மாற்றப்படும் ஆனால் அது எப்போதும் போலவே செயல்படும், அவ்வளவுதான். இப்போது, ஏர்டெல் மற்றும் இந்தியா போஸ்ட் மட்டுமே பேமன்ட்ஸ் வங்கி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில், ஆதித்யா பிர்லா ஐடியா பேமன்ட்ஸ் பேங்க் இந்த ஆண்டின் முதல் பாதியில் சேவைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணப்பை சேவை டூ வங்கி சேவை - இந்த பிரதான மாற்றத்திற்கான நோக்கம் என்ன?
பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியின் முக்கிய நோக்கம் - இந்தியாவின் சேவை பெறாத மற்றும் சேவை செய்யும் சமூகத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களை பிரதான பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதாகும்.
இந்த சேவைக்கு நான் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா.?
இந்த புதிய பிபிபிஎல் சேவைக்கு உங்கள் பணப்பையை மாற்றபடுவது தானாகவே நடக்கும். தனிப்பட்ட ஒருவர் தனது அக்கவுண்டில் உள்ள பணத்தை பற்றி எந்தவொரு கவலையும் கொள்ளத்தேவையில்லை.
பேடிஎம் பணப்பையில் இருக்கும் என் பணம் என்னவாகும்?
பேடிஎம் வேலட்டில் உள்ள பணம் அதன் பணப்பை வணிகத்தில் புதிதாக இணைத்துள்ள நிறுவனத்திற்கு (பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க்) மாற்றும். பின்னர் உங்களின் பணம் புதிய நிறுவனத்தின் ஒரு அங்கமாக மாறும்.
இந்த மாற்றத்திற்குப் பிறகு நான் ஒரு புதிய கணக்கைத் திறக்க வேண்டுமா?
இல்லை. நீங்கள் உங்கள் பேடிஎம் பணப்பையை அதே அக்கவுண்ட் கொண்டு தொடரலாம். அது வேலை செய்யும். ஒருவேளை நிறுவனத்தின் புதிய கட்டண வங்கியுடன் புதிய கணக்கைத் திறக்க விரும்பினால், நீங்கள் புதிய அக்கவுண்ட்டை திறக்கலாம்.
பேடிஎம் வங்கியில் ஒரு புதிய கணக்கை எவ்வாறு திறப்பது?
பேடிஎம் வங்கி நீங்கள் ஒரு தனி கணக்கு திறக்கும் விருப்பத்தை உங்களுக்கு அளிக்கிறது. நீங்கள் பணம் செலுத்தும் வங்கி கணக்கைத் திறக்க விரும்பினால் வட்டியுடன் சம்பாதிக்கலாம்.
பிற வங்கிகளில் இருந்து இது எப்படி வேறுபட்டது?
பேடிஎம் வங்கியானது உங்கள் கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் பணத்தின் வரம்பைக் கொண்டிருக்கும்போதே வழக்கமான வங்கிகளைவிட வித்தியாசமாக வேலை செய்கிறது. இந்த பேடிஎம் வங்கியில் ஒரு வாடிக்கையாளர் ரூ.1 இலட்சத்தை விட அதிகமாக வைத்திருக்க முடியாது. அதவது தனிநபர்களிடமிருந்தும் சிறு வியாபாரங்களிடமிருந்தும் பணம் செலுத்தும் வங்கிகள் ரூ.1 லட்சம் என்ற எல்லை புள்ளியை கொண்டிருக்கும், மேலும் பேடிஎம் வங்கியானது முன்கூட்டியே பணத்தை கொடுக்கவோ அல்லது கடனாகவோ அளிக்காது. அனால், இது பேங்க் புத்தகங்களையும், டெபிட் அட்டைகளையும் வெளியிடும் அனால் கிரெடிட் அட்டைகள் கிடையாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470