பேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.!
பேஸ் ஆப் எனப்படும் செயலி தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதை குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டதொட்டியெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்பேஸ் ஆப்பை பயன்படுத்தி நமது முகத்தை வயதான நபராகவும் சித்
பேஸ் ஆப் எனப்படும் செயலி தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதை குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டதொட்டியெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்பேஸ் ஆப்பை பயன்படுத்தி நமது முகத்தை வயதான நபராகவும் சித்தரிக்க முடியும். ஆண்ணை பெண்ணாகவும் காட்ட முடியும். பெண்ணை ஆணகவும் காட்ட முடியும்.

இந்நிலையில் பேஸ் ஆப் பயன்படுத்தி நாம் அனைவரும் விளையாட்டாக நமது முகத் தோற்றங்களை மாற்றி வருகின்றோம். இதை நாம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விட்டு வருகின்றோம்.
இந்த பேஸ் ஆப்பை பயன்படுத்துமாறு நமது உற்றார் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து வருகின்றோம். நாம் ஸ்பேஸ் ஆப் இம்மேஜ்களை பயன்படுத்துவதால், நமது குடும்ப மானமும் காட்டாயம் கப்பலேறும் என்பதில் சந்தேகமில்லை.

பேஸ் ஆப் அறிமுகம்:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, முதல் பல்வேறு தரப்பினர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த பேஸ் ஆப்பை. ஆனால், இதை அவர்கள் பெரிதாகவும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த விளம்பரமும் இல்லாமல் இருந்தது எனலாம். இந்த பேஸ் ஆப்பை பயன்படுத்தி நமக்கு பிடித்தமாதிரி வயதான முகத்தோற்றத்திற்கு அதில் உள்ள (ஆர்பிடிபியல் இன்டலிஜென்ட்) மாற்றிக் காட்டுகின்றது.

தற்போது வைரல் ஆகியுள்ளது:
இந்த ஸ்பேஸ் ஆப் நாம் உலகம் முழுக்கவும் வைரலாகியுள்ளது. ஒரு பிரபலம் தனது புகைப்படத்தை தான் வயதானால் இப்படித்தான் இருப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய, சினிமா, விளையாட்டு மற்றும் பிரபலங்களும் இதைபோல் பதிவேற்றம் செய்ய, மற்றவர்களும் சமூக வதைளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் தற்போது உலகம் முழுக்கவும் வைரலாகியுள்ளது.

காணமல் போனவரை கண்டுபிடித்துள்ளது:
இந்நிலையில், சீனாவில் 18 ஆண்டுகளுக்கு காணாமல் போன முன் 3 வயது குழந்தையாக இருந்தபோது காணாமல்போன நபர் ஒருவர் பேஸ் ஆப் செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஷை யு வீபெங் எனும் அவர், சிறுவயதில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் நன்மை பயக்க கூடியதாக இருக்கின்றது. மற்றொரு புறம் இதனால் ஆபத்துகளும் ஏற்பட கூடியதாகவும் இருக்கும்.

டர்ம்ஸ் அண்டு கன்டிஷன்:
பேஸ் ஆப் நிறுவனம் டர்ம்ஸ் அண்டு கன்டிஷன்களை கூறியுள்ளது. எதுக்கு வேண்டுமானம் நாம் அப்லோடு செய்யும் புகைப்படங்களை பயன்படுத்துவோம். வேறு நிறுவனத்துக்கும் விற்பனை செய்வோம். விளம்பர நிறுவனத்தும் விற்பனை செய்வோம். தாங்கள் மேம்படுத்தும் செயலிக்கும் பயன்படுத்தும் என்று நிபந்தனைகளில் கூறியுள்ளது.
நாம் இதை பயன்படுத்துமாறு கூறியுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் புகைப்படங்கள் வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்தால், இது ஆபத்தாகவும் முடிய வாய்ப்பிருக்கின்றது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்:
பேஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ள நிபந்தனைகளை படித்து பார்க்காமல் புகைப்படங்களை அப்போடு செய்வதால்,
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டடேன் என்று விவேக் படத்தின் வரும் காமெடியை போல கூட நடக்க வாய்ப்பிருக்கின்றது.
இதனால் நாம் உஷராக இருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற ஆப்களை அதில் உள்ள நிபந்தனைகளை படித்து பார்த்து தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் நமது புகைப்படங்களை தவறாகவும், அல்லது சர்ச்சைக்குரிய புகைப்படங்களாகவும் பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்றது. இதனால் நாம் தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications