வாட்ஸ்ஆப்பை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது; ஏன்.?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப்போன்ற பிரபலமான மெசேஜிங் தளங்களை காலி செய்யும் முனைப்பில் கூகுள் நிறுவனம் அதன் சொந்த சாட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப்போன்ற பிரபலமான மெசேஜிங் தளங்களை காலி செய்யும் முனைப்பில் கூகுள் நிறுவனம் அதன் சொந்த சாட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. கூகுள் அறிமுகம் செய்யும் இந்த புதிய சாட் சேவையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சில மேம்பட்ட அம்சங்கள் இடம்பெறும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பில் இருந்து, கூகுள் நிறுவனத்தின் மூலோபாய பின்னடைவையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுள், அதன் சொந்தமான, ஒரு பிரத்யேக சாட் ஆப்பை உருவாக்க இந்துநாள் போராடி வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ரிச் கம்யூனிகேஷன்ஸ் சர்வீஸ்.!
கூறப்படும் இந்த ஆப் ஆனது, ஒரு முழுமௌயான கூகுள் சாட் ஆப் ஆக இருக்காது. மாறாக உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான மொபைல் கேரியர்களுடனான கூட்டணியின் விளைவாக உருவாகும் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைலில் இயங்கும் ஒரு ஆப் ஆக இருக்கும். கூகுள் நிறுவனத்தின் இந்த சாட் ஆப் ஆனது ரிச் கம்யூனிகேஷன்ஸ் சர்வீஸ் அல்லது ஆர்சிஎஸ் என்று அழைக்கப்படும் ஒரு புதிய தரத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் உயர்-அளவு புகைப்படங்களை, வீடியோக்களை மற்றும் GIF களை அனுப்ப அனுமதிக்கும்.

கூகுள் அசிஸ்டென்ட் அம்சமும் இடம்பெறும்.!
மேலும் வாட்ஸ்ஆப்பில் இருப்பது போன்றே ரீடர் ரெசிப்ட்களை பெறுவதோடு, அவர்கள் உரையாடும் நபர் டைப் செய்யும் போது திரையில் "டைப்பிங்" என்கிற வார்த்தை காட்சிப்படும். இந்த கூகுள் சாட்டில் நிறுவனத்தின் கூகுள் அசிஸ்டென்ட் அம்சமும் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் அழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.!
கூகுள் அறிமுகம் செய்யும் இந்த சாட் சேவையானது, குறுந்செய்தி எனப்படும் எஸ்எம்எஸ் (short message service) சேவைகளை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பல அப்கிரேட்களை வழங்கும். பல்வேறு ரிச்-மெசேஜிங் ஆப்ஸ்களின் பரவலால் கிட்டத்தட்ட அழிவை நோக்கி பயணிக்கும் எஸ்எம்எஸ் சேவையானது, கூகுள் நிறுவனத்தின் புதிய சாட் சேவைக்கு பிறகு முற்றிலும் அழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது இரட்டிப்பாகும்.!
லண்டனில் நிறுவப்பட்ட உலகளாவிய செல்லுலார் நிறுவன குழுவான GSMA-வின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு முடிவில், 350 மில்லியன் மக்கள் ரிச் கம்யூனிகேஷன்ஸ் சர்வீஸை பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது. பல மலிவான மொபைல்களில் இந்த புதிய மெசேஜ் தரத்தை பயன்படுத்த முடியாது என்றாலும் கூட, சுமார் மூன்று பில்லியன் மக்கள் ஆர்சிஎஸ் தரத்தை அப்கிரேட் செய்ய முடியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு மெசேஜ் ஆனது எஸ்எம்எஸ்-ஐப் பயன்படுத்தி அனுப்பப்படும்.!
எஸ்எம்எஸ் போன்றே, இந்த புதிய மெசேஜிங் தரநிலையானது, பல்வேறு கேரியர் நெட்வொர்க்குகள் உடன் வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சேவையை இயக்குவது பயனர்கள் கையில் இல்லை, மொபைல் கம்பனிகளின் முடிவில் தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக மெசேஜ்கள் இணையம் வழியாக பரிமாற்றப்படும். ஆனால் இந்த கூகுள் சாட் சேவையை பொறுத்தவரை ஒரு மெசேஜ் ஆனது எஸ்எம்எஸ்-ஐப் பயன்படுத்தி அனுப்பப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இந்த ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ் ஆதரவு கிடைக்குமா என்கிற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.


Click it and Unblock the Notifications