வங்கிகளுக்கு தெரியாமல் இயங்கும் ஹேக்கர்களின் போலி ஆப்கள்.!
வங்கிகள் கணக்கு விவரம் பாஸ்வேர்டு திருட முடியாதபடியும், செயிலியை வைத்து இருந்த போதும் தற்போது வங்கிகளின் பெயரில் செயலியை உருவாக்கி வங்கி கணக்கு எண், நெட்பேங்கிங் எண், ஏடிஎம்கார்டு எண், பாஸ்வேடுகளைய
நாம் நகரத்திலோ இல்லை கிராமத்தித்திலோ அல்லது வேறு எங்காவது வசதித்தாலும் பெருச்சாளி தொல்லை அதுவும் வீட்டு சமையல் அறை முதல் அனைத்து இடங்களிலும் நுழைந்து விடுகின்றது. இதனால் நாம் சேமித்து வைத்து இருந்த காய்கறி, உணவு பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களையும் தின்று நாசப்படுத்தியும் விடும்.
அந்த பெருச்சாளி நுழைந்த இடத்தையும் நாசப்படுத்திவிடும். இதுபோலவே தற்போது ஸ்மார்ட் போன் காலம் அதிகரித்து விட்டதால், ஹேக்கர்கள் நமது மொபைல் போனில் நுழைந்து தனிப்பட்ட விவரம் முதல் வங்கி கணக்கு வரை திருடி வருகின்றனர்.

வங்கிகள் கணக்கு விவரம் பாஸ்வேர்டு திருட முடியாதபடியும், செயிலியை வைத்து இருந்த போதும் தற்போது வங்கிகளின் பெயரில் செயலியை உருவாக்கி வங்கி கணக்கு எண், நெட்பேங்கிங் எண், ஏடிஎம்கார்டு எண், பாஸ்வேடுகளையும் திருடி வருகின்றனர்.
வங்கிகளின் பெயரில் இயங்கும் போலி ஆப் குறித்து அந்த வங்கிகளுக்கே தெரியாதது தான் ஆச்சரியமூட்டுகின்றது.

ஸ்மார்ட் போன்களில் ஆப்கள்:
தற்போது ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டுக்காக ஏராளமான ஆப்கள் இருக்கின்றன. இந்த ஆப்கள் அனைத்தும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது போன் நிறுவனத்தின் பெயரில் உள்ள ஸ்டோர்களில் இருந்து பதிவு இறக்கம் செய்து கொள்ள முடியும். இதனால் ஏராளான வாடிக்கையாளர்கள் சுபலமாகவும் எளிமையாகவும் கையாண்டு வருகின்றனர்.

ஹேக்கர்கள் அதிகரிப்பு:
தற்போது ஹேக்கர்கள் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகரித்துள்ளனர். முன்பு எல்லாம் நமது இமெயிலுக்கு தகவலை அனுப்பி அதன் மூலம் விரங்களை பெற்று பல்வேறு விவரங்களையும் திருடி வந்தனர். ஹேர்கள் குறித்து அனைவரும் விழிப்புணர்வு ஏற்பட்டதால், அதனை தவிர்த்து வந்தனர். பிறகு போனுக்கு ஆப்பிளின் லிக்கை அனுப்பி தனிப்பட்ட தகவல்களையும், அந்தரங்ககளையும் திருடி வந்தனர். இதிலும் விழிப்புணர்வு ஏற்பட்டதால், பொது மக்களிடம் இருந்து பணத்தை திருடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

போலி ஆப்புகள் உருவாக்கினர்:
ஹேர்கள் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கும் வகையில் போலி ஆப்களை உருவாக்கி அதன் மூலம் நகராட்சிகளுக்கு வரி செலுத்தும் போதும், வங்கி கணக்கு விவரங்களை திருடி வந்தனர். இதுகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது.

வங்கிகளின் பெயரில் போலி:
தனித்துவமாக வங்கிகளின் பெயரிலேயே இப்போது போலி ஆப் உருவாக்கியுள்ளது. அதிலும் இந்தியாவில் முன்னணியில் உள்ள எஸ்பிஐ, ஐசிஐசி வங்கி, கனரா, எச்டிஎப்சி உள்ளிட்ட 7 வங்கிகளில் பெயரில் போலி ஆப் உருவாக்கப்பட்டுள்ளதாக தனியார் ஐடி நிறுவனம் ஆய்வில் கூறப்படுகின்றது.

தகவல்கள் திருடப்பட்டுள்ளது:
போலி ஆப்கள் இருப்பதை உணராத வாடிக்கையாளர்கள் அதை டவுன்லோடு செய்து பயன்படுத்திய போது, வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு, கையிருப்பு விரங்கள், கிரெட்டி கார்டு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகலல்கள் களவாடப்பட்டு வருதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

வங்கிகள் விசாரணை:
தொழில் நுட்ப பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த தனியார் ஐடி நிறுவனம் இந்த போலி ஆப்களால் வாடிக்கையாளர்களின் முதலீடுகளுக்கு ஆபத்து நிலவுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரித்து வருவதாக வங்கிகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications