Shareit செயலிக்கு சரியான மாற்று செயலியை அறிமுகம் செய்த 17-வயது சிறுவன்.!
இந்தியாவில் மீண்டும் புதிதாக 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக தடை செய்யப்பட்ட செயலிகளின் க்ளோன்களாக பயன்படுத்தப்பட்டு வந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வந்தது.

இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட சீன பயன்பாடுகளாள டிக்டாக் மற்றும் ஷேரீட் போன்றவற்றிற்கு பயனுள்ள மாற்றாக இந்தியா அடிப்படையிலானபயன்பாடுகளை உருவாக்குவதற்கான அவசரம் அதிகரித்துள்ளது. அதன்படி தற்சமயம் பல செயலிகள் வெளிவந்த வண்ணம்உள்ளன.

இதுபோன்ற ஒரு ஆப் பயன்பாடு அன்மையில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இது ஃபைல்களை பகிரும் பயன்பாடகடூடூ டிராப் செயலி ஆகும். இதை ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ராஜோரி மாவட்டத்தை சேர்ந்த அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி என்ற 17 வயது சிறுவன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dodo Drop App செயலி ஆனது இரண்டு சாதனங்களுக்கு இடையில் ஆடியோக்கம், படங்கள், வீடியோக்கள், மற்றும் உரைகளை பகிர அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலியை உருவாக்க அவருக்கு நான்கு வாரங்கள் ஆனதாக டெவலப்பர்
கூறியுள்ளார்.

இந்த செயலி 480Mbps வரை பரிமாற்ற வீதத்தைக் கொண்டுள்ளது, இது SHAREit ஐ விட வேகமானது மற்றும் பயன்படுத்த எளிதானது. குறிப்பாக மாற்றப்படும் தரவு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் குறியாக்கம் செய்யப்படும் என அந்த சிறுவன்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








