குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய ஆப்: மக்கள் வரவேற்ப்பு.!
குறிப்பாக இந்த ஆப் வசதியில் புகார் தெரிவித்த பிறகு அதன் தற்போதைய நிலை என்ன என்ற விவரங்களை பார்க்க முடியும், பின்பு பொதுமக்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் இந்த செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.
இப்போது கோடைக்காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் குடிநீர் சிக்கல் ஏற்படும், இதற்கு தீர்வு காணச் சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் புதிய ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக
சென்னை மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த சிறப்பான ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிமுகம் செய்துள்ள இந்த CMWSSB எனப்படும் ஆப் வசதியில் புகார் அளிக்கும் போது புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
CMWSSB ஆப் வசதியை ஸமார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்தல் வேண்டும், பின்பு பொதுமக்கள் புகார் அளிக்கும் போது பெயர், மொபைல் எண் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை
அளிக்க வேண்டும்.

சரியான விவரங்களை அளித்து புகார் தெரிவித்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியாக பதில் அளிக்கும் போது தான் புகார் பதிவு செய்யப்படும் என சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு புகார் செய்யப்பட்ட பிறகு அது குறித்த எஸ்எம்எஸ் உறுதி தகவல் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆப் வசதியில் புகார் தெரிவித்த பிறகு அதன் தற்போதைய நிலை என்ன என்ற விவரங்களை பார்க்க முடியும், பின்பு பொதுமக்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் இந்த செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications