பசியால் வாடும் குழந்தைகளுக்கு உதவ தரமான செயலியை அறிமுகம் செய்த இந்திய சிறுவன்.!
பெங்களூரில் உள்ள ஹெட் ஸ்டார்ட் கல்வி நிறுவனத்தின் பயிலும் இந்திய மாணவரான ஆயுஷ் கராட்-க்கு ஒவ்வொரு நாளும் பள்ளிமுடிந்து வீட்டுசென்ற பின்னர் மேற்கூறியவற்றை விட பல்வேறு முக்கிய பணிகள் உள்ளன
பெரும்பாலான குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் வீட்டுப்பாடங்களை செய்தபின்னர், தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் விளையாடுவது அல்லது புதிய வீடியோ கேம்களை விளையாடுவது என பொழுதுபோக்குவர்.

பெங்களூரில் உள்ள ஹெட் ஸ்டார்ட் கல்வி நிறுவனத்தின் பயிலும் இந்திய மாணவரான ஆயுஷ் கராட்-க்கு ஒவ்வொரு நாளும் பள்ளிமுடிந்து வீட்டுசென்ற பின்னர் மேற்கூறியவற்றை விட பல்வேறு முக்கிய பணிகள் உள்ளன.

ஊட்டச்சத்து குறைபாடு
நம்நாட்டில் உள்ள மற்றவர்கள் போலவே இவரும் இந்திய சமூகங்கள் நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான கடுமையான பிரச்சினைகளுக்கு அந்நியராக இல்லை. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 44% பேர் "ஊட்டச்சத்து குறைபாடு" உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றும் உலகின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள இளம் வயதினரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

"எம் நியூட்ரிசியன்"
வெறுமனே உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக, ஆயுஷ் இந்த பிரச்சனையை எதிர்த்துப் போராட தொழில்நுட்பத்தின் மூலம் உதவ முடிவு செய்தார். அவர் எட்டாம் வகுப்பில் நுழைவதற்கு முன்னரே ஒரு சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டெவலப்பர் ஆனார்(பல பொறியியல் பட்டதாரிகளை பின்னுக்கு தள்ளி). பின்னர் தானே சொந்தமாக "எம் நியூட்ரிசியன்" ( MNutrition) என்ற செயலியை உருவாக்கினார்.

சமூகத்திற்கு உதவுகிறது இச்செயலி
எந்த குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் என்பதை கண்டறியவும், அவர்களது ஆரோக்கிய இலக்குகளை அடைய என்ன செய்யவேண்டும் என தெளிவாகவும், எளிமையாகவும் பயனர்களுக்கு விளக்கி ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துபோராட இந்த சமூகத்திற்கு உதவுகிறது இச்செயலி.

மருத்துவ தகவலையும் சேமித்து வைக்க முடியும்
குழந்தை எடை குறைவாக ஊட்டச்சத்து குறைபாட்டோடு உள்ளதா என்பதை கண்டறிய, அவர்களது பாலினம், வயது, உயரம் மற்றும் எடை போன்ற புள்ளிவிவர தகவல்களை பயனர்கள் இந்த செயலியில் உள்ளீடு செய்து அறிந்துகொள்ளலாம். மேலும் குழந்தையின் மருத்துவ தகவலையும் சேமித்து வைக்க முடியும்.

தொழில்நுட்ப புதுமை படைப்பு
அடுத்த கட்டத்தில், ஆண்டிபாயாடிக்ஸ் மற்றும் ஆரோக்கிய உணவுகள் உட்பட சிகிச்சைக திட்டங்களை அந்த செயலியில் இணைக்க விரும்புகிறார் ஆயுஷ். இதன்மூலம் சில மருந்துகளுக்கு தொடக்க தேதிகள் கண்காணிக்கப்பட்டு அவற்றின் விளைவுகள் மற்றும் வெற்றிவிகிதங்கள் கண்டறியப்படும்.
"நீண்ட காலமாக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெற்றி, சுகாதாரத் தொழிலாளர்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவதை பொறுத்தது. எம்நியூட்ரீசியன் போன்ற தொழில்நுட்ப புதுமை படைப்பு, மொபைல் கால்குலேட்டராகப் பயன்படுத்தப்பட்டு, குழந்தைகளை குறுகிய காலத்திற்குள் சரியாகவும், நம்பகமானதாகவும் பராமரிக்க உதவுகிறது" என்கிறார் ஆயுஷ்.

அறிவியல் கண்காட்சி
படிப்பறிவில்லா சுகாதார பணியாளர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும், போதுமான மருத்தவ வசதி கூட கிடைக்க இந்தியாவின் குக்கிராம குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்கும் வகையிலும் இந்த செயலியை வடிவமைத்துள்ளார் ஆயுஷ். ஆண்ராய்டு இயங்கதளத்தில் செயல்படுவதால் இந்தியாவின் பெரும்பாலான போன்களை இது சென்றடையும் என நம்புகிறார்.
ஆயுஷ் இன்னும் கல்லூரிக்கு செல்லவே சில ஆண்டுகள் ஆகும் என்பதை நம்புவது கடினமாகவே உள்ளது. அவர் இன்னும் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
ஆயுஷ் தற்போது கூகுள் பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் அறிவியல் கண்காட்சி 2018-2019ல் பிராந்திய அளவில் தேர்வான டாப் 100 மாணவர்களில் ஒருவர். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான நடத்தப்படும் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய ஆன்லைன் போட்டிகளில் ஒன்றான இது , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கு பணியாற்றுபவர்களை கவுரவிக்கிறது.


Click it and Unblock the Notifications