Just In
- 2 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 3 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 4 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 4 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆப் உருவாக்கி கொடுத்த மருத்துவர் கைது! என்ன ஆப் தெரியுமா?
காயமடைந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் மொபைல் ஆப் உருவாக்கி கொடுத்த பெங்களூருவை சேர்ந்த கண் மருத்துவர், என்.ஏ.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் டில்லியின் சாமினா பகுதியில் வசித்து வந்த ஜஹான்கான்சாகிப் சாமி வாணி மற்றும் ஷீனா பஷீர் பெஹ் என்ற தம்பதியினர் ஐஎஸ்ஐஎஸ் துணை அமைப்புடன் நேரடி தொடர்பில் இருப்பதாக என்ஏஐ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர்களை என்ஏஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இறுதியில் இந்த தம்பதியினருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தம்பதிகளில் தொடர்புகளை ஆராய்ந்த என்ஏஐ அதிகாரிகளுக்குப் பெங்களூருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற 28 வயதான கண் மருத்துவர் மீது சந்தேகம் எழுந்தது, சந்தேகத்தின் பெயரில் அவரை கண்காணித்து வந்த காவல்துறையினருக்கு அவரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது உறுதியானது.
இப்போது இந்த காரணங்களுக்கு இ-பாஸ் கிடைக்கும்! எப்படி சரியாக விண்ணப்பிப்பது?
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று இவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் மெடிக்கல் ஆப் என்று அழைக்கப்படும் மருத்துவ உதவி செயலி ஒன்றை அவர் உருவாக்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல், அண்மையில் ஆயுதம் தொடர்பான ஒரு செயலியையும் இவர் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண் மருத்துவராக பணியாற்றி வரும் அப்துல் ரகுமான் 2014 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து பயங்கரவாதிகளின் மருத்துவ முகாமிற்கு நேரடியாக சென்று மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரை மேலும் விசாரிக்க என்ஏஐ அமைப்பு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470