இந்தியாவில் சிறந்த 5 ஆப்கள்: இது உங்களுக்கு கட்டாயம் உதவும்.!
பாரத் மேட்ரிமோனி ஆப் என்பது திருமண சேவைக்காக இயங்கின்றது. இந்த ஆப்பைல் திருமணம் செய்ய விரும்பும் ஆண்-பெண்கள் குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும். ஆன்லைனிலேயே தங்களுக்கு விரும்பமானவர்களை தேர்வு செய்து
இந்தியாவை இணைக்கும் விதமாக ஐந்து செயலிகள் (ஆப்) இருக்கின்றன. அவைகளின் சிறப்பே மொழி, கலாச்சாரம், இருப்பிடம் கடந்து 5 ஆப்கள் இந்தியாவை சிறந்த முறையில் ஒருங்கிணைக்கின்றன.

இந்த ஆப்களை பொது மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாரத் மேட்ரிமோனி:
பாரத் மேட்ரிமோனி ஆப் என்பது திருமண சேவைக்காக இயங்கின்றது. இந்த ஆப்பைல் திருமணம் செய்ய விரும்பும் ஆண்-பெண்கள் குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும். ஆன்லைனிலேயே தங்களுக்கு விரும்பமானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இது மொழி, கலாச்சாரத்தையும் தாண்டி சிறப்பாக செயல்படுகின்றது.

ருபோசோ:
இந்த ருபோசோ ஆப் ஆனது 9 மொழிகளில் கிடைக்கின்றது. புதிய வீடியோ, மேம்படுத்தப்பட்ட வீடியோ எடிடிங் கருவியாக இருக்கின்றது. இந்த ருபோசோ செயலி. இந்த 11.5 மில்லியன் இந்தியர்கள் இதற்கு பயனாளராக உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஐஐடி முன்னாள் மாணவர்களான பாங்காடு, அவாஷ்ஸ் சக்ஸேனோ, கௌஷல் சுபாங்க் ஆகியோரல் இது உருவாக்கப்பட்டது.

கானா:
இந்த கானா ஆப் ஆனது இசைப்பாடல்களை இந்தியாவில் வர்த்த ரீதியில் ஒளிபரப்பு செய்யும் நிறுவமாக உள்ளது. இந்தியாவில் 9 மொழிகளில் கானா ஆப் இயங்குகிறது. கானா இசை அமைப்பாளர்களுடன் சேர்ந்து நேரடியாக உங்களுக்கு இசை விருந்தை அளிக்கின்றது.

ரூபிக்:
ரூபிக் ஆப் என்பது தனி மனிதர்களின் தேவை, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை ஊக்குவிப்பதற்காக சந்தை அடிப்படையில் கடன் வழங்கும் தளமாகும். அதிகமாக ரூபிக் பிராந்திய மொழிகளில் சேவையாற்றுகின்றது.

ஹக்தர்ஷாக்:
ஹக்தர்ஷாக் என்பது ஒரு சமூக நிறுவனமாகும். இது உங்களுக்கு திட்டங்களையும் முக்கிய ஆவணங்களையும் எடுக்க பயன்படுகின்றது. பாஸ்போர்ட், வங்கி கடன்கள், கடினமாக உள்ள ஆவணங்களை சரிசெய்ய உதவுகின்றது. மேலும் அரசு சார்பில் உள்ள திட்டங்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது. இந்த நிறுவனம் பல்வேறு வகையான திட்டங்களையும் பெற இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் இணைக்கின்றது.


Click it and Unblock the Notifications