இந்தியாவில் டிக் டாக்கால் 12கோடி பேர் அடிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இந்தியாவில் டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி தங்கள் நடிப்புத் திறமை வீடியோவாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். மேலும், அதில் கிடைக்கும் லைக்கும் 12 கோடி பேர் அடிமையாக உள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்
இந்தியாவில் டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி தங்கள் நடிப்புத் திறமை வீடியோவாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். மேலும், அதில் கிடைக்கும் லைக்கும் 12 கோடி பேர் அடிமையாக உள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வீடியோ பதிவிடுபவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தவிர்க்க கவுன்சிங் அளிக்கவும் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளையம் தாண்டி வந்துள்ள டிக்டாக் ஆப்பு குறித்தும் நாம் முழுமையாகவும் அறிந்து கொள்ளலாம்.

டிக் டாக் ஆப்:
பட்டி தொட்டியொங்கும் டிக் டாக் ஆப்பை சிறுவர்கள் முதல் பொரியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
சீரியலில் நடித்தவர்கள் முதல் சீரீயசாக நடித்தாலும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வரை அனைவரும் டிக்டாக்கில் கல்நது கட்டி தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.

பைட் டான்ஸ்:
இந்தியாவில் டிக்டாக், ஹெலோ, விகோ லைட் போன்ற செயலிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பொழுது போக்கு விரும்பிகளை மெய்மறந்து ஆடவைத்து கொண்டிருப்பது பைட் டான்ஸ் என்ற தகவல் தொழில்நுட்பம் நிறுவனம்.

உலகளவில் 50 நிறுவனங்கள்:
டிக்டாக் நிறுவனம் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படுகின்றது. இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஓடியா, இந்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் செயலிகளை இயக்குகிறது.

பணியில் 500 பேர் குழு:
இந்தியாவில் நகரங்கள் முதல் நகரங்கள் வரை பெண்களும், ஆண்களும் டிக்டாக்கில் செய்யும் சேட்டைகளை பார்த்து ரசித்து, அதனை டிக் டாக்கில் பதிவிடுவதற்கான அனுமதியை வழங்க 500 பேர் கொண்ட பணியாளர் குழு 24 மணி நேரமும் பணியில் உள்ளது.

60 லட்சம் ஆபாச, வன்முறை வீடியோ நீக்கம்:
கடந்த ஒரு ஆண்டில்மட்டும் டிக்டாக்கில் ஆபாசம் மற்றுமு; வன்முறையை தூண்டும் வகையில், பதிவிட்டப்பட்ட 60 லட்சம் வீடியோக்களை டிக்டாக் பணியாளர்கள் அழித்துள்ளதாக பைட் டான்று; நிறவனத்தின் செய்தி தொடர்பாளர் பெல்லே பல்டொஷா தெரிவித்தார்.

கோடி பேர் வீடியோ பதிவு :
டிக்டாக்கில் 12 கோடி பேர் தங்களது வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும், ஹெலே செயலியில் 4 கோடி பேரும், விகோ செயலியில் 2 கோடி பேரும் தங்களது திறமைகளைக் காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் பெல்லே பல்டொஷா (belle baldoza) தெரிவித்தார்.

நேரக் கட்டுப்பாடும் இருக்கின்றது:
மேலும், அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ள டிக்டாக் செயிலயை பாதுகாப்பானதாக மாற்ற 13 விதிகளுடன் செயல்பாட்டை மேம்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி 13 வயதுக்குட்பட்டோர் டிக்மாக் செயலியை பயன்படுத்தாமல் இருக்கவும், ஒருவர் அதிகபட்சம் எத்தனை நிமிடங்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற நேரக் கட்டுப்பாடும் அறிமுகமாகியுள்ளது.

டிக்டாக் செயலிக்கு பேஸ்புக் போல பாஸ்வேடு :
டிக்டாக் செயலிக்கு பேஸ்புக் போல பாஸ்வேடு பயன்படுத்தும் முறையும் செயல்பாட்டில் உள்ளதாகவும், டிக்டாக் செயலியல் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஆபாச வன்முறை வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

உத்தரவாத்திற்கு பின் தடை நீக்கம்:
இதற்கான 13 விதிகள் அடங்கிய உத்தரவாத்தை கொடுத்த பின்னரே இந்தியாவில் டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டமதாக பெல்லே பல்டொஷா தெரிவித்தார்.

கவுன்சிலிங் அளிக்க புதிய தொழில்நுட்பம்:
தற்கொலை செய்யும் எண்ணத்தில் இனி யாராவது வீடியோ பதிவிட்டால், அவர்களது செல்போனிற்கு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கும் புதிய தொழில்நுட்பம் திங்கட்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் பெல்லெ பல்டொஷா தெரிவித்தார்.

பல 100 கோடிக் மேல் வருவாய்:
டக்டாக் செயலி மூலம் இந்தியாவில் விளம்பர வருவாயாக மட்டும் பல நூறு கோடிகளை குவிக்கும் பைட்டான்ஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் இந்தியாவில் இனி தடை விதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications