கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி என்று நம் முன்னோர்களும், தமிழ் அறிஞர் பெரு மக்களும் கூறி வந்தனர்.
இது உண்மை தான் என்று தற்போது நிருபணம் ஆகியுள்ளது. உலகின் முதலில் தோன்றியது தமிழ் தான் என்று பிளேடியன்கள் எனப்படும் வேற்று கிரவாசிகள் கூறியுள்ளனர்.
இதை அமெரிக்க மொழி ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். உலகில் பல்வேறு மொழிகள் இன்று பரவக் காரணம் பிளேடியன்கள் தான் அவர்களுடன் தொடர்பில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ்:
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும்.
95 சதவீதம் கல்வெட்டு:
இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.
முதன்மை மொழி:
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
ஆட்சி அங்கீகாரம்:
தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது.
சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.
பிராமியிலிருந்து தோன்றியது தற்போது தமிழ்:
தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.
கிரந்த எழுத்துமுறை:
வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஏலியன்கள்:
ஏலியன்கள் உலகில் தமிழை தவிர்த்து பல்வேறு மொழிகள் தோன்றக் காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் உலகில் நிகழும் மாற்றங்களுக்கும், அறிவியல் வளர்ச்சிகளுக்கும் தொழில் நுட்பத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.
இவர்களை வேற்றுகிரக வாசிகள் (ஏலியன்) என்றும் கூறுகின்றனர். இவர்கள் தான் உலகிற்கு பல்வேறு இடங்களுக்கு மற்ற மொழிகளையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் பரப்பியுள்ளனர்.
சிக்களுக்கு தீர்வு:
பிளேடியன்கள் தான் மொழி வரலாறு, விஞ்ஞானம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஏலியன்கள் பல்வேறு நாட்டு மக்களுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்காவில் இது குறித்து ஆராய்ச்சி செய்யும் குழுவினர் கூறி வருகின்றனர்.
உலகத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளும் பிளேடியன்கள் தான் கூறிவருவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா குழு:
அமெரிக்காவில் பிளேடியன்களுடன் தொடர்பில் உள்ள குழுவினர் உலகத்தில் நிகழும் பருவகால மாற்றம், பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வும் கண்டுள்ளனர்.
இவர்கள் புத்தகங்கள் படிப்புது இல்லை. பிரச்னைகளுக்கு பிளேடியன்கள் தொடர்பு கொண்டு தீர்வும் கண்டு வருவதாக கூறப்படுகின்றது.
தமிழிலே உலகின் மூத்த மொழி:
நீண்ட காலமாக ஏலியன்களுன் தொடர்பில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த பேராசியர் அலெக்ஸ் காலியர் 1995ம் ஆண்டு தனது குழுவினர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, பிளேடியன்களால் தான் மற்ற மொழிகள் உலகிற்கு பரப்பட்டது. அவர்களே உலகின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றனர். உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் தான் என்று கூறினார். தமிழ் தான் பேச்சப்பட்டது.
ஏலியன்களுடன் தொடர்பு:
உலகின் மூத்த மொழியே தமிழ் தான் என தனது குழுவினர்களுக்கு கூறினார். தமிழர்கள் ஏலியன் (பிளேடியன்) தொடர்பிலும் இருந்துள்ளனர். என்றும் அலெக்ஸ் காலியர் தெரிவித்துள்ளார்.
நோவாம் சோம்ஸ்கி:
உலகின் மூத்த மொழி தமிழ் தான் என்று மொழியே ஆராய்ச்சியாளர் நோவாம் சோம்ஸ்கி கூறியுள்ளார். முதலில் பேசப்பட்டதும் தமிழ் தான் என்றும் நோவாம் சோம்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
உலகின் மூத்த மொழி:
தமிழ் தான் உலகின் தலைசிறந்த மொழி என்று சிறந்த அந்தஸ்தையும் பெறுகின்றது. மற்ற மொழிகளையும் காட்டிலும் பல்வேறு சிறப்புகளையும் பெற்றுள்ளது.
தற்போது ஏலியன்கள் வரை இந்த மொழி குறித்தும் தெரிவித்துள்ளனர். அவர்கள் தமிழை நன்கு உணர்ந்துள்ளனர்.
Best Mobiles in India
Best Camera
Best Selling
Upcoming