3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை சோதனை: வெற்றி.!


நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Advertisement

இந்த சோதனை ஆந்திர மாநில கடற்பகுதியில் நடைபெற்றது என்றும், இந்த ஏவுகணை ஆனது சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக நீருக்கு அடியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பகல் நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த ஏவுகணையை உருவாக்கியது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும்.

இதுதவிர நீர்மூழ்கி கப்பலில் பொருத்துவதற்கு முன்பு மேலும் பல கட்டங்களாக இந்த ஏவுகணை சோதிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக இந்த கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணையாகும்.

Advertisement

மேலும் 700கி.மீ தொலைவு வரையிலான இலக்குகளைத் தாக்கும் பிஓ-5 ஏவுகணை இந்தியாவின் முதல் நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.

Best Mobiles in India

Advertisement

English Summary

India successfully test-fires 3,500 km range K-4 nuclear capable missile : Read more about this in Tamil GizBot