ஹெட்செட்டை ரிப்பேர் செய்த நபருக்கு நடந்த கொடுமை.! ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இன்று அனைவருமே ஹெட்செட் மாடல்களை அதிகம் விரும்புகின்றனர், காரணம் கால் அழைப்புகளுக்கு மிக அதிகமாக தேவைப்படுகிறது, குறிப்பாக ஹெட்செட் மூலம் மிகத் துல்லியமான ஆடியோக்களை கேட்க முடியும். மேலும் சியோமி,
சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் ஹெட்செட் மாடல்கள் சிறந்த தரம் உள்ளதாக இருக்கிறது, அதே சமயம் விலையும் சற்று உயர்வாக இருக்கும்.

Advertisement

கடந்த ஞாயிறன்று திருப்பூரில் மொபைல் ஹெட்செட்டை ரிப்பேர் செய்த வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்ததால், மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேச மாநிலம் கோராப்பூரைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ராகுல். இந்த நபர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிப்புரத்தில் தங்கி அங்குள்ள பிரிண்டிங் யூனிட்டில் வேலை செய்து வருகிறார்.

சால்டரிங்

மேலும் கடந்த ஞாயிறன்று வீட்டில் வைத்து தனது செயலிழந்த மொபைல் ஹெட்செட்டை ரிப்பேர் பாரத்துக் கொண்டிருந்தார், அந்தசமயம் வயர் சால்டரிங் செய்கையில்,எதிர்பாரதவிதமாக அவர் மீது மின்சாரம் பாயந்தது.

மருத்துவமனை

பின்பு உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர், மேலும் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீசார், மின் அதிர்ச்சி சம்பவத்தால் வாலிபர்
பாதிக்கப்பட்டதை வழக்கு பதிவு செய்தனர்.

மின்கசிவு

குறிப்பாக சாலிடரிங் செய்யும் போது தான் மின்கசிவு ஏற்பட்டிருக்கும் என சந்தேகிக்கும் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அன்மையில் ஹெட்செட் மூலம் பல பாதிப்புகள் மற்றும் இந்த சம்பவம்
போல பிரச்சணைகள் பலருக்கும் ஏற்பட்டுள்ளன.

லூசியா பினஹெரியோ கொடூரமான சாவு; காரணம் என்ன?

பிரேசிலில் உள்ள ரியாச்சோ பிஃரியோ நகரில் வசிக்கும் லூசியா பினஹெரியோவை மருத்துவமனைக்கு "மிக விரைவாக" கொண்டு சென்றும் கூட, அவளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது.? அவர் எப்படி இறந்தார்.? என்பதை அறிந்தபின்னர் ஸ்மார்ட்போனின் மீதான அச்சமும், முக்கியமாக ஹெட்செட் மீதான மரண பயம் தொற்றிகொள்கிறது என்றே கூறவேண்டும்.

விபரீதமான முறையில் பலி.!

ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் ஏற்றும்போது அதை பயன்படுத்துவதே தவறு என்று பரிந்துரைக்கும் நிலைப்பாட்டில், தனது மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டே அதை பயன்படுத்தியது மட்டுமின்று அதனோடு இணைக்கப்பட்ட ஹெட்போனை காதுகளுக்குள் பொருத்தியிருந்த மாணவி ஒருவர், மிகவும் விபரீதமான முறையில் பலியாகியுள்ளார்.

விசாரணையில்.!

அவர் மீது மின்சாரம் பாய்ந்தது மட்டுமின்றி காதுகளில் அணிந்திருந்த ஹெட்போன் உருகிய நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சார்ஜரில் செருகப்பட்டிருந்த அவரின் மொபைல் ஒரு "பெரிய அளவிலான மின்சாரம்" மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காதுகளில் ஹெட்ஃபோன்கள்.!

அவரின் பாட்டி அளித்த தகவலின்படி, அவர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடந்துள்ள போதும் அவரின் காதுகளில் ஹெட்ஃபோன்கள் அப்படியே இருந்துள்ளது.

உருக்குலைவு.!

இதிலிருந்து அவர் தனது செல்போனை சார்ஜ் செய்துகொண்டே பயன்படுத்தியதால் ஏற்பட்ட மின்சார தாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட மொபைல் மற்றும் ஹெட்செட் உருக்குலைவு ஆகிய காரணங்களினால் மரணித்துல்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்திற்கு பிறகு.!

"மின் அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு தான், லூசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று மருத்துவ பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் மழை எதுவும் பெய்யவில்லை, ஆனால் மின்னல் வெட்டுகள் இருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English Summary

Man electrocuted in Tirupur while repairing earphone : Read more about this in Tamil GizBot