இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டேதான் வருகிறது, குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
அதன்படி ரயில் பயணத்தின்போது பயணிகளுக்காக Content on Demand (CoD) சேவையை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது இந்திய ரயில்வே அமைப்பு. குறிப்பாக இதன் பயன் என்னவென்றால், ரயில் பயணம் செய்யும்போது சிக்னல் பிரச்சனை காரணமாக நேரடியாக இணையத்தில் படங்கள் அல்லது வீடியோக்களை நம்மால் பார்க்க முடியாது. அதனால்தான் Zee Entertainment-ன் Margo Netowork உடண் இணைந்து coD சேவையை உருவாக்கி வருகிறது இந்திய ரயில்வே.
குறிப்பாக இந்த சேவை அடிக்கடி ரயில்பயணம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக மிகவும் உதவியாய் அல்லது வசதியாய் அமையும் எனும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சேவையை உருவாக்குவதற்கு Railtel, Margo netrwork மற்றும் Mini Ratna PSU போன்ற நிறுவனங்கள் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சேவையின் மூலம் பயணிகள் தடையில்லாமல் அந்தத் தளத்தில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை காண முடியும் எனத் தெரிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
ஆனால் இந்த புதிய சேவை வரும் 2022-ம் ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதைநாடு முழுவதும் 8,731 ரயில்கள் மற்றும் வைஃபை வசதி உடைய 5,563 ரயில் நிலையங்களிலும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரயில்வே அமைப்பு கொண்டுவரும் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அல்லது பணம்செல்லுத்தியும் பயன்படுத்தலாம் குறிப்பாக இந்த சேவையின் மூலம் விளம்பர வருமானத்தைப் பெறவும் திட்டமிட்டுவருகிறது ரயில்வே நிர்வாகம்.