புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களுக்கு நல்ல முறையில் பயன்கொடுக்கிறது, ஆனால் சிலர் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேவையில்லாத சில காரியங்களை செய்கின்றனர். அதன்படி ''யூடியூப் மூலம் பைக் திருட கற்றுக் கொண்டேன்'' என்று போலசில் பிடிபட்ட டூ வீலர் திருடன் ஒருவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் இருசக்கரவாகனங்கள் திருடிய வழக்கில் கொரட்டூர், அக்ரஹாரத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 30)
என்ற கொள்ளையனை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சென்னையில் இருக்கும் கொளத்தூர் என்எவிஎம் நகரை சேர்ந்தவர் கணேஷ் (33) என்பவரது பைக் கடந்த மாதம் 30-ம் தேதி அதே பகுதியில் ரெட்டி தெரு பகுதியில் காணாமல் போனது. பின்பு அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததன் பேரில் கொள்ளையன் ரமேஷ் போலீசாரிடம் மாட்டிக் கொண்டான.
அதாவது கடந்த 22-ம் தேதி வில்லிவாக்கம் பகுதியில் ஜவுளி கடைக்கு எதிரில் நின்ற பைக்கை திருட முயன்ற போது போலீசார் இவனை கைது செய்தனர். பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளை கள்ளச்சாவி போட்டு எடுத்தசெல்வதில் கில்லாடியன இவன் சென்னை வில்லிவாக்கம், அயனாவரம், சேத்துப்பட்டு, ராஜமங்கலம், பாடி, வடபழனி,ä கொரட்டூர் பகுதிகளில்
தனது கைவரிசையை காட்டியுள்ளான்.
ரமேஷ் திருடிய 12பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் யூடியூப்பில் பைக் திருடுவது எப்படி என்பது பற்றிபோடப்பட்டிருந்ததைப் பார்த்து திருடி கற்றுக்கொண்டதாக அவன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
அதாவது பைக் திருடுவதற்கு முன்பு டேங்க் கவர் மற்றும் சீட்டுக்கு அடியில் உள்ள ஆர்சி புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தால்அதனை திருடுவான். ஆர்சி புத்தகத்தில் உள்ளபடி அதே மாடலாக உள்ள பைக்காக பார்த்து திருடி, பின்பு திருடிய பைக்கில்உள்ள இன்ஜின் இன்ஜின் நம்பர், சேசிங் நம்பரை வெல்டிங் மூலம் அழித்து விட்டு தான் திருடி வைத்துள்ள ஆர்சி புத்தகத்தில் உள்ள பதிவெண்,இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர் ஆகியவற்றை டிரில்லிங் மிஷின் மூலம் பதிவு செய்து விடுவான்.
மேலும் திருடி பைக் விற்பதற்கு OLX இல் ஒரு விளம்பரத்தை வெளியிடுவான் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஒருவேளைபோலீசில் சிக்கிக்கொண்டால் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வான். பின்பு இந்த புதிய திருட்டுவித்தையை ரமேஷ் டியூப் சேனல்களில் பார்த்து தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
News Source: newindianexpress.com