சியோமி நிறுவனத்தின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டு. இந்நிலையில் போகோ எப்1 ஆஐருஐ 11 மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் மொபைல் போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றது.
சியோமியின் அடுத்த படைப்பான Poco F2 விரைவில் வெளியாகவுள்ளது. டிப்ஸ்டர் பகிர்ந்த ஆவணங்களின்படி, Poco F2 என்ற போனின் வர்த்தக முத்திரையை ஜியோமி தாக்கல் செய்துள்ளது - இது பிரபலமான Poco F ஸ்மார்ட்போனின் தொடர் செயல்பாட்டில் உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
அசல் போக்கோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஒரு வர்த்தக முத்திரை வழங்கப்பட்டது. எனவே அறிவிப்பு அநேகமாக நெருங்கிவிட்டது. GSMArena சனிக்கிழமையன்று ஒரு டிப்ஸ்டரை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியானது, இந்த போன் விரைவில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.