மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்கிறது.
5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் அட்டகாசமான மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்.!
மேலும் இந்நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் எனும் மாடல் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மோட்டோரோலோ நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.
அதன்படி இந்நிறுவனம் விரைவில் வெளியிடும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்க வலைத்தளமான FCC-யின் சான்று பெற்று இருக்கிறது. மேலும் இந்த சாhதன்தின் மாடல் எண் XT2041-1கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்த மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்பு மற்றும் வன்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பின் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்றும், பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும சிறந்த பாதுகாப்பு வசதியைன் கொண்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 26வாட் டர்போ சார்ஜிங் வசதி, மற்றும் வைஃபை, ஜிபிஎஸ், வோல்ட்இ உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் பின்புற கைரேகை சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.