சியோமி நிறுவனம், இன்று நடைபெற்ற அதன் நிகழ்ச்சியில் சியோமி மி பே சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சியோமி மி பே சேவையை, சியோமி நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் பே சேவைக்குப் போட்டியாக சியோமி நிறுவனம் தற்பொழுது இந்த சியோமி மி பே சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்தப் பயனரின் போன், கான்டாக்ட் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற சேவைகளுக்கான அனுமதியைப் பயனர்கள் வழங்கவேண்டியது கட்டாயம்.
சியோமி மி பே சேவையைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் அவர்களின் யு.பி.ஐ. முகவரி மற்றும் வங்கி அக்கவுண்ட் விபரங்களை மி பே சேவையுடன் இணைக்க வேண்டும். பின் மி பே சேவையைப் பயன்படுத்து உங்கள் அக்கௌன்ட்டிலிருந்து நேரடியாகப் பணம் அனுப்ப முடியுமென்று சியோமி தெரிவித்துள்ளது.
சியோமி மி பே சேவை செயலி MIUI தளத்தின் கீழ் ஆப் வால்ட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி மி பே பயனர்கள் மிக எளிமையான செயலியை வடிவமைத்துள்ளதாகவும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சியோமி மி பே சேவையில் வங்கி பண பரிவர்த்தனை மற்றும் மொபைல் பேமென்ட் சேவை, மொபைல் பில் பேமெண்ட், ரீசார்ஜ், டி.டி.எச் ரீசார்ஜ், மின்சேவை கட்டணம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கும் இந்த செயலி மூலம் பணம் செலுத்திக்கொள்ளலாம்.
சியோமி மி பே சேவையைப் பயன்படுத்தும் அனைத்தும் பயனர்களின் அனைத்து விவரங்களும் உள்நாட்டு சர்வர்களிலேயே சேமிக்கப்படும் என்றும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தின் இறுதிக்குள் அனைவருக்கும் சியோமி மி பே சேவை கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.