
சிஎஸ்ஆர் பிரிட்டிஷ் சிப் நிறுவனத்தை சாம்சங் நிறுவனம் 31 கோடி டாலருக்கு வாங்க உள்ளது. மொபைல் விற்பனையில் முதன்மை வகித்து வரும் சாம்சங் நிறுவனம், சிப் தயாரிப்புகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வரும் பிரிட்டிஷ் சிப் சிஎஸ்ஆர் நிறுவனத்தினை 3.4 கோடி டாலருக்கு வாங்குகிறது.
இந்த தகவலை சாம்சங் நிறுவனமே கூறியுள்ளது. சிஎஸ்ஆர் சிப் நிறுவனத்தை வாங்குதன் மூலம் இன்னும் சிறந்த முன்னேற்றங்களை சாம்சங் நிறுவனம் கொடுக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.
மொபைல் உலகில் சாம்ராஜ்ஜியம் புரிந்து வரும் சாம்சங் நிறுவனம், புதிய படைப்புகளை சிறப்பானதாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க புதிய யுக்தியை கையாண்டு வருகிறது.
சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை பிராசஸரில் கொடுக்க இது போன்று சிப்களின் தேவை முக்கியமானதாக உள்ளது. இதனால் சிஎஸ்ஆர் சிப் நிறுவனத்தினை வாங்க, சாம்சங் நிறுவனம் முற்பட்டிருப்பது இன்னும் புதிய மாற்றங்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களையும் சாம்சங் நிறுவனத்தின் படைப்புகளில் பார்க்கலாம். இது மட்டும் அல்லாமல் புதிதாக 300 பணியாளர்களை நியமிப்பதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளத என்பது கூடுதல் தகவல்.






























