Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் கேலக்ஸி எஸ்-3!

Updated: Tuesday, March 26, 2013, 9:04 [IST]

samsung galaxy s3 to launch in india on may 31

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த மாதம் 31-ஆம் தேதி வெளியாகும். ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் உலக நாடுகளில் சக்கை போடு போட்டது.

இதை தொடர்ந்து பல நிறுவங்கள் புதிய தொழில் நுட்பம கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆரம்பித்தது.

அதன் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இப்போது ஆப்பிளின் அடுத்த வாரிசான ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த மாதம் 31-ஆம் தேதி இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வருகை தரும் என்று ஒரு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

4.8 இஞ்ச் திரை வசதியையும், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டது.

இது போல் இன்னும் பல உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று பல பேர் ஆவலுடன் இருக்கின்றனர்.

அந்த வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில நாட்களில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது என்ற இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று தான்.

Story first published:  Thursday, May 24, 2012, 10:21 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll