Just In
- 31 min ago பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- 1 hr ago பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- 1 hr ago அசரவைக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. எந்த திட்டம்?
- 4 hrs ago ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
Don't Miss
- News வைகோவுக்கு தோள் கொடுத்த கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இரங்கல்!
- Movies சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பாகிஸ்தானின் 'வீபரீத' வளர்ச்சி : அலறும் அமெரிக்க 'தின்க் டேன்க்'..!
'தின்க் டேன்க்' என்றால் மதியுரையகம் ஆகும். அதாவது, குறிப்பிட்ட சில முக்கியமான விடயங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு நிறுவனம் அல்லது எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்தையும் சாராத குழு ஆகும்.
அப்படியாக, சமீபத்தில் அமெரிக்க 'தின்க் டேன்க்' குழு பாகிஸ்தானின் அணு ஆயுத தொழில்நுட்பம் பற்றியும், 2020-ஆம் ஆண்டு வாக்கில் பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுத வளர்ச்சி பற்றியும் ஆய்வு செய்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் :
அமெரிக்க 'தின்க் டேன்க்' ஆய்வின்படி அணு ஆயுத தொழில்நுட்பத்தில் மிகவும் வளர்ந்து வரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.
ஆய்வு :
அதாவது 2020 ஆம் ஆண்டு வாக்கில் பாகிஸ்தானிடம் 200 அணு ஆயுதங்கள் வரை இருக்கும் என்று கூறியுள்ளது அமெரிக்க 'தின்க் டேன்க்' ஆய்வு.
அணு பிளவு பொருட்கள் :
சுமார் 200 அணு ஆயுதங்கள் வரை உருவாக்கும் அணு பிளவு பொருட்கள் பாகிஸ்தானிடம் உள்ளது என்று 'தின்க் டேன்க்' கருத்து கூறியுள்ளது.
ஆய்வறிக்கை :
அணு மூலோபாய நிலைப்புத்தன்மை (Strategic Stability in the Second Nuclear Age) என்ற பெயரில் அமெரிக்க 'தின்க் டேன்க்' ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசியா :
பல நாடுகள் அணு ஆயுத உற்பத்தியை குறைத்து கொண்டிருக்கும் அதே வேளையில் ஆசியாவில் அணு ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சியானது அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறது அந்த ஆய்வின் முடிவு.
முன்னிலை :
அதிலும் முக்கியமாக பாகிஸ்தான் தான் உலகிலேயே மிகவும் அதிகமான அணு ஆயுத தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
விநியோக அமைப்புகள் :
தனது அணு ஆயுதங்களுக்கு விமானம், ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் என 11 விநியோக அமைப்புகளை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முழு கவனம் :
அண்டை நாடான இந்தியாவை மிரட்டும் நோக்ககத்திலேயே தான் பாகிஸ்தான் அணு ஆயுத வளர்ச்சியில் முழு கவனம் செலுத்துகிறது என்றும் வெளிநாட்டு உறவுகள் மீதான கவுன்சில் (Council on Foreign Relations) தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதி :
மேலும் பாகிஸ்தானின் அதிநவீன அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி கொள்ளாதப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாட்டு உறவுகள் மீதான கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
பாகிஸ..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2015/11/12-1447314401-formore.jpg">மேலும் பல சுவாரசியமான 'செல்பீ' செய்திகள் :
பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியர்கள்..!
அம்பலமானது பாகிஸ்தானின் 'சதி' திட்டம்..!
இந்தியாவிற்குள் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா..!
வெடி குண்டு தாக்குதல்
காஷ்மீரில் துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்களின் தீவிரவாதிகள் காரில் வெடி குண்டு நிரம்பிய வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 50 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பாகிஸ்தான், சீனாவை தவிர மற்ற நாடுகள் தாக்குதலுக்கு இரங்கலை தெரிவித்துள்ளளன. ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. மேலும், 1999 முதல் தீவிரவாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பட்டியிலும் இடம் பெற்றுள்ளது.
காஷ்மீர் தாக்குதலில் 50 வீரர்கள் பலி:
20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பயங்கர சம்பவம் தான் இது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்பிஎப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் சென்றனர். வழியில், புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய காரை வீரர்களின் சென்று பேருந்து மீது, வெடிக்க விட்டான். இதில் 50 வீரர்கள் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பாகிஸ்தான் பின்னணி:
சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் மீது கால்புணர்ச்சி காட்டி வருகின்றது. மேலும் கார்கில் போருக்கு பிறகு தீவிர வாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி கொடுத்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி வருவது பெரும் வேதனைக்குரியது. இந்த சதியும் தற்போது அம்பலமாகியுள்ளது.
1999 முதல் தாக்குதல் இன்று வரை தாக்குதல்கள்:
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1999ம் ஆண்டு முதல் தற்போது வரையில் பாதுகாப்பு படைகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் விவரங்கள்: 1999, நவ. 3 : பாதமிபாக் ராணுவ தலைமையகம் மீது நடத்தப்படட தாக்குதலில் 10 வீரர்கள் பலி 2000, ஏப். 19: முதல் முறையாக கார் வெடிகுண்டு தாக்குதல். இதில், 2 வீரர்கள் பலி. 2000, ஆக. 10: ஸ்ரீநகரில் சாலையில் நின்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 2001, அக், 1: ஸ்ரீநகரில் உள்ள பழைய சட்டப்பேரவை வளாகத்தின் வெளியே தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் வீடு அருகே:
2005, நவ. 2: அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையத்தின் குடியிருப்பு அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 வீரர்கள், பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். 2008, ஜூலை 19: ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2013, ஜூன் 24: ஸ்ரீநகர் ஐதர்போராவில் ஆயுதங்கள் இன்றி வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2014, டிச. 5: உரியில் உள்ள மொக்ரா ராணுவ முகாமில் நுழைந்து 6 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2016, ஜூன் 3: பாம்போரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 வீரர்கள் பலியானார்கள்.
எவ்வாறு தாக்குதல் தடுக்க முடியும்:
ராணுவ முகாம் மற்றும் குடியிருப்பு, ரோந்து செல்லும் வாகனங்களுக்கு முன்னும், வீரர்கள் செல்லும் வாகனங்களுக்கு முன் அதி நவீன கேமரா பொருத்திய டிரோன்களை உலாவிட வேண்டும். அதில் வரும் காட்சிகளை கண்காணித்து சந்தேகிக்கும் படி ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக அங்கு சென்று எச்சரிக்கை விடுத்து தாக்குதல்களை நடத்தி அழிக்க வேண்டும். அந்த வகை டிரோன்களில் அதி நவீன மெட்டல் டிடெக்கர், வெடிகுண்டு அல்ட்ரா ஸ்கேனர் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
உரி தாக்குதல்கள்:
2016, ஜூன் 25: சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2016, செப். 18: பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவ முகாமில் 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்துதான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.
எவ்வாறு தாக்குதல் தடுக்க முடியும்:
ராணுவ முகாம் மற்றும் குடியிருப்பு, ரோந்து செல்லும் வாகனங்களுக்கு முன்னும், வீரர்கள் செல்லும் வாகனங்களுக்கு முன் அதி நவீன கேமரா பொருத்திய டிரோன்களை உலாவிட வேண்டும். அதில் வரும் காட்சிகளை கண்காணித்து சந்தேகிக்கும் படி ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக அங்கு சென்று எச்சரிக்கை விடுத்து தாக்குதல்களை நடத்தி அழிக்க வேண்டும். அந்த வகை டிரோன்களில் அதி நவீன மெட்டல் டிடெக்கர், வெடிகுண்டு அல்ட்ரா ஸ்கேனர் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
சேட்லைட் மூலம் கண்காணிப்பு:
இதற்காக தனி அமைப்பை உருவாக்கி சேட்லைட் மூலம் ராணுவ நிலைகள் மற்றும் செல்லும் வாகங்களையும் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். திட்டமிட்டபடி ராணுவ வாகம் செல்லும் இடம், குடியிருப்பு ராணுவ நிலைகளை கண்காணிக்க சேட்லைட் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். மேலும் சேட்லைட் மூலம் தீவிரவாதிகள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக தாக்குதல் நடத்தி அழிக்கவும் திட்டமிட வேண்டும்.
சேட்லைட்-ஏவுகணை:
சேட்லைட் மூலம் தீவிரவாதிகள் இருக்கும் இடம் தெரிந்தால், ஜிபிஎஸ் டிராக்கிங் மூலம் அவர்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த வேண்டும். சர்சைக்குரிய பகுதிகள் குறித்து அங்கு முழுமையாக சுற்றித்திரியும் வகையில் சேட்லைட் டிரோன்களையும் பறக்க விட்டு வேவு பார்க்க வேண்டும்.
மோடி ஆவேசம்:
இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் முழுமையாக மோடி வழங்கியுள்ளார். தீவிர வாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் ஆவேசமாகவும் கூறியுள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470