Just In
- 22 min ago ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!
- 38 min ago 6 போன்கள் மீதும் ஆபர்.. ரூ.6000 க்கும் இருக்கு.. ரூ.10,000 க்கும் இருக்கு.. Amazon-ல் களைகட்டும் ஹோலி சேல்!
- 1 hr ago குறைந்த விலையில் பிளாக்ஷிப் சக்தி.. புது Snapdragon சிப்செட்.. இனி வாங்கும் போனில் இந்த SoC இருக்கா பாருங்க..
- 2 hrs ago அள்ளிக்கொட்டிய Airtel.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்.. இலவசமாக ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா..
Don't Miss
- Lifestyle சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு சிறப்பா இருக்கப்போகுது...
- Movies லிஃப்ட்டுக்குள் சிக்கிய காவியா.. குழந்தையை காப்பாற்ற போராடிய எழில்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
- News தொழிலதிபர் டூ அரசியல்வாதி.. திருச்சியில் மதிமுக வேட்பாளராக களமிறங்கும் துரை வைகோ.. யார் இவர்
- Sports சிஎஸ்கேவில் அடுத்த விக்கெட் காலி.. தூக்கி கொண்டு செல்லப்பட்ட முஷ்டாஃபிகுர் ரஹ்மான்.. என்ன நடந்தது?
- Travel வழக்கத்தை விட சென்னையில இந்த வருஷம் வெயில் அதிகமா இருக்குமாம் – கத்தரி வந்தா நம்ம காலியா?
- Finance இந்தியாவில் பறக்கும் புதிய விமானம் ஃப்ளை91.. பெங்களூர் தான் டார்கெட், அப்போ சென்னை..?
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு டெக்னாலஜியோட வரும் முதல் கார் இது தான்! நெக்ஸான் சிஎன்ஜி கார் செய்யப்போகும் மேஜிக்!
உலக நாடுகளை 'தெறிக்கவிட்ட' இந்தியா...!
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. - சி33, இந்தியாவின் ஏழாவது வழிசெலுத்தல் செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி (navigation satellite IRNSS-1G) சுமந்து கொண்டு, நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ( Satish Dhawan Space Centre) இருந்து சரியாக மதியம் 12.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது..!
எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்க இதுதான் காரணம்: 380 கி.மீ அப்பால் இலக்கை அழிக்கும் நரகாசூரன்.!
வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்த இந்த செயற்கைகோள் ஏவுதல் ஆனது வழக்கமான ஒரு இஸ்ரோ சாதனை மட்டுமில்லாது, ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் சாதனையாகும்..!
கவுண்ட் டவுன் :
1,425 கிலோ எடையுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி செயற்கைக்கோள் வெளியீட்டு கவுண்ட் டவுன் ஆனது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.20-க்கு தொடங்கியது.
ஒருங்கிணைப்பு பணிகள் :
51.30 மணி நேர கவுண்ட் டவுனின் போது பல்வேறு நிலைகளில் ராக்கெட் ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் ப்ரோபலன்ட் நிரப்புதல் பணிகளெல்லாம் நடைப்பெற்றன.
பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் :
இது இந்தியாவின் தனிப்பட்ட அமைப்பு (civil domain) கொண்ட, வெறும் ஏழே செயற்கைகோள்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும் ( regional navigation satellite system)
வெற்றி :
செலுத்தப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி செயற்கைக்கோள் ஆனது வெற்றிகரமாக துணை ஜியோ சின்க்ரோனஸ் ட்ரான்ஸ்பர் சுற்றுப்பாதைக்குள் ( sub-Geosynchronous Transfer Orbit) நுழைந்து விட்டது.
உலக பதிப்புகள் :
இதேபோன்ற மற்ற நாடுகளின் மூன்று உலக பதிப்புகள் அவற்றின் இராணுவங்களின் மூலம் உலகளாவிய வணிக பாதுகாப்பு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிக துல்லியம் :
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் ( இந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் அமைப்பு) ஆனது அதிக துல்லியம் மற்றும் அதிக அளவிலான இந்திய கட்டுப்பாட்டில் ஜிபிஎஸ் வசதியை பயனர்களுக்கு வழங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
நீட்டிக்கப்படும் :
அதாவது இந்திய வட்டாரத்தில் 20 மீட்டர் அதிக அளவிலான துல்லியத்தை வழங்கும் என்றும், அது இந்திய பிராந்தியம் முழுவதும் சுமார் 1500 சதுர கிலோமீட்டர் அளவு நீட்டிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
அமெரிக்க-ரஷ்ய-சீனா :
நன்கு அறியப்பட்ட ஜிபிஎஸ் ஆனது அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமானதாகும், அதே போல் ரஷ்யாவிற்கு ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ் , சீனாவின் தனது பெய்டோ மூலம் க்ளோபல் சிஸ்டம் தனை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறது.
28 முதல் 35 செயற்கைக்கோள்கள்:
ஐரோப்பாவின் க்ளோபல் சிஸ்டம் ஆன கலிலியோவில், ஒவ்வொரு நாடுகளின் 28 முதல் 35 செயற்கைக்கோள்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வான் - கடல் :
இந்தியாவின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் ஆனது, வான் - கடல் - ஏனைய நாடுகளுக்கு இடையே ஆன கப்பல் போக்குவரத்து ஆகியவைகளை ஒரு நிலையான 24/7 சேவையாக அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் செயல்படுத்தும்.
இந்திய ராணுவம் மற்றும் ஏவுகணை :
மேலும் இது மறைகுறியாக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இந்திய ராணுவம் மற்றும் ஏவுகணை தொடர்பான திட்டங்களுக்கும் உதவ இருக்கிறது.
நிலை :
அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில், அனைத்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக்கோள்களும் நிலைபெற்றுவிடும் என்றும், சமிக்ஞைகள் மற்றும் செயல்திறன் சரிபார்க்கப்பட்ட பின்பு பயன்படுத்தபடும் என்றும் இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தயார் :
மேலும் செயற்கைகோளின் இரண்டு உதிரி பாகங்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணில் செலுத்தும் தயார் நிலையில் இருக்கிறது.
தரைக்கட்டுப்பாட்டு :
நாடு முழுவதும் உள்ள கண்காணிப்பு நிலையங்களின் முழு-நீள தரைக்கட்டுப்பாட்டு மையம் (ground control centre) ஆனது பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ளது.
2013 :
இந்த அமைப்பை உருவாக்கும் பணியானது, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை, முதல் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து ஆரம்பமானது.
1இ மற்றும் 1எப் :
12 ஆண்டுகளுக்கு சேவை வழங்கும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எப் ஆனது 2016 ஜனவரி மற்றும் மார்ச் மாதம் முறையே விண்ணில் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
இந்தியாவை பார்த்து 'மீண்டும் ஒருமுறை' வாயைப்பிளக்க போகின்றன உலக நாடுகள்..!
கல்பனா சாவ்லா : பிரபஞ்சத்தில் இருந்து வந்தவள்..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470