
லக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனில் புதிய ஆன்ட்ராய்டு 5.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்க திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.
எல்லா நவீன எலக்ட்ரானிக் சாதன பொருட்களிலும் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தனை அறிமுகம் செய்து வருகிறது பல மொபைல் நிறுவனங்கள். பொதுவாகவே ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது.
இதனால் பல ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனில் புதிய ஆன்ட்ராய்டு 5.0 ஜெல்லி பீன் இயங்கதளத்தினை அப்டேட் செய்ய உள்ளதாக திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.
இந்த புதிய ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த ஜெல்லி பீன் இயங்குதளம் சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.






























