புதிய சாதனை படைத்தார் மார்க் சூக்கர்பர்க்..!!

By Meganathan
|

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக இருக்கும் ஃபேஸ்புக் மேலும் பெரிய நிறுவனமாக மாறியிருக்கின்றது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சூக்கர்பர்க் தனது முகநூல் பக்கத்தில் ஒரே நாளில் சுமார் 100 கோடி பேர் ஃபேஸ்புக் பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் ஃபேஸ்புக் வரலாற்றில் முதல் முறையாக இந்த இலக்கு எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆண்ட்ராய்டு ஜிகர்தண்டா தெரியுமா உங்களுக்கு..??

 புதிய சாதனை படைத்தார் மார்க் சூக்கர்பர்க்..!!

மார்க் ஃபேஸ்புக் போஸ்டில் திங்கள் கிழமை உலகில் இருக்கும் 7 பேரில் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைப்பில் இருந்தனர், ஃபேஸ்புக் வரலாற்றில் இது முதல் முறை என்றும் இது துவக்கம் தான் என்றும் தன் போஸ்டில் அவர் தெரிவித்திருந்தார். வெளிப்படையான மற்றும் இணைக்கப்பட்ட உலகம் தலைச்சிறந்த ஒன்று, இதன் மூலம் உறவுகள் பலமாகும் இதன் மூலம் வாழ்க்கை மேலும் உற்சாகமாக அமையும் என்றும் மார்க் தெரிவித்துள்ளார்.

மெய்ஸூ எம்எக்ஸ்5 ஃபர்ஸ்ட் லுக்..!

 புதிய சாதனை படைத்தார் மார்க் சூக்கர்பர்க்..!!

புது பயனாளிகள் எங்கிருந்து வந்தனர் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை என்றாலும் மார்க் இந்த மைல்கல்லை அடைய உதவியாக இருந்த அனைத்து ஃபேஸ்புக் பயனாளிகளுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். இதை கொண்டாட சிறப்பு வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

சாம்சங் கேலக்ஸி எஸ்7 : கான்செப்ட் புகைப்படங்கள்..!?

தற்சமயம் உலகின் இளம் வயது பணக்காரர்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சூக்கர்பர்க் முதலிடத்தில் இருக்கின்றார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 2,72,667 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இண்டர்நெட்.ஓஆர்ஜி மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் 450 கோடி பயனாளிகளை இணைக்க திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook witnessed one billion users in a single day. Read more in Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X