நாசா விருது வாங்கிய சென்னை சிறுவன், எதுக்குனு சொன்னா நம்ப மாட்டீங்க.!

அப்படி சாய் கிரண் என்ன செய்தார்.? எதற்காக சாய் கிரானுக்கு நாசா விருது வழங்கியது.?

|

18 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று சற்று யோசித்து பார்த்தல் ஸ்கூல் பரீட்சைக்கு பயந்து பயந்து படித்துக்கொண்டோ அல்லது ஹோம் வர்க் எழுதிக் கொண்டே இருந்திருப்போம். ஆனால் சென்னையை சேர்ந்த 18 வயதே நிரம்பிய சாய் கிரண், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விருது ஒன்றை தனதாக்கி கொண்டுள்ளார்.

இதுவே பெரிய சுவாரசியமாக தகவலாக இருக்கின்ற பட்சத்தில், அப்படி சாய் கிரண் என்ன செய்தார்.? எதற்காக சாய் கிரானுக்கு நாசா விருது வழங்கியது.? - என்ற தகவல் உங்களின் சுவாரசியத்தை மேலும் கூட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.!

கற்பனை

கற்பனை

நிலாசோறு சாப்பிட்ட நம் அனைவருக்குமே விண்வெளி மீது தனி ஆர்வம் உண்டு, விண்வெளிக்குள் பறந்தால் எப்படி இருக்கும்.? மிதந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு பொழுதாவது கற்பனை செய்து பார்க்காத மனிதனே இருக்க வாய்ப்பில்லை. சாய் கிரணும் அப்படியான மனிதர்களுள் ஒருவன் தான்.!

நாசா அமெஸ் விண்வெளி தீர்வு

நாசா அமெஸ் விண்வெளி தீர்வு

18 வயது நிரம்பிய சாய் கிரண் பி, சமீபத்தில் நாசா அமெஸ் விண்வெளி தீர்வு 2017 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார். என்ன போட்டி.? அவர் அளித்த தீர்வு என்னவென்று தெரியுமா.??

மனித இனம்

மனித இனம்

நிலவிற்கு சென்று மனிதன் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும், அப்படியாக பூமியில் இருந்து நிலவிற்கு எப்படியெலலாம் மனித இனம் செல்லலாம்.? என்ற கேள்விக்கு, பூமியில் இருந்து நிலவிற்கு எலிவேட்டர் (அதாவது மின்தூக்கி) ஒன்று உருவாக்கி அதன் வழியாக நிலவுக்கு செல்லலாம் என்று ஒரு அற்புதமான தீர்வை சாய் கிரண் முன்மொழிந்துள்ளார்.

ஆய்வறிக்கை

ஆய்வறிக்கை

இந்த போட்டியின் அடிப்படையான "நிலவில் மனித குடியேற்றங்கள்" சார்ந்த திட்டப்பணியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதலே சாய் கிரண் ஈடுபட்டு வருகிறார். அதன் விரிவான ஆய்வறிக்கையை இந்த போட்டியில் அவர் சமர்ப்பித்தும் உள்ளார். சாய் கிரண் தனது திட்டத்திற்கு 'கனெக்டிங் மூன், எர்த் அண்ட் ஸ்பேஸ்' மற்றும் 'எச்யூஎம்இஐயூ (HUMEIU) ஸ்பேஸ் ஹேபிடட்ஸ்' என்று தலைப்பிடப்பட்டு மின் தூக்கி மூலம் நிலவுக்கு மனிதர்கள் பயணிப்பதை விவரித்துள்ளார்.

ஈர்ப்புத்தன்மை இல்லாமல்

ஈர்ப்புத்தன்மை இல்லாமல்

சாய் கிரண் திட்டத்தின் முதல் பிரிவில் மனிதர்கள் நிலவில் குடியேற்றங்களை உருவாக்க சாத்தியமான சரக்குகளை கொண்டு செல்ல உதவும் லிப்ட்களை உருவாக்குவதை விவரிக்கிறார். சாய் கிரணின் அறிக்கையில் மிக முக்கியமான அம்சமாக ஈர்ப்பை குறிப்பிடுகிறார் ஈர்ப்புத்தன்மை இல்லாமல் மனிதர்கள் அங்கு குடியேற முடியாது என்று விவரிக்கிறார்.

40,000 கிமீ உயரத்திற்கு

40,000 கிமீ உயரத்திற்கு

மேலும் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை நிலவில் பொழுதுபோக்கு, விளையாட்டு, ஆட்சிமுறை மற்றும் விவசாயம் அமைக்கும் கவனத்தையும் சாய் கிரண் புகுத்தியுளார். இந்த யோசனையின் கீழ் 40,000 கிமீ உயரத்திற்கு மின் தூக்கி உருவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதன் வடிவமைப்பானது சந்திரனை சார்ந்த அல்லது பூமியை சார்ந்த லிஃப்ட் வடிவத்தில் ஏற்றது எதுவோ அதுபோல் அமைக்கப்படலாம் என்றும் ஆய்வறிக்கை விவரிக்கிறது.

உலகம் முழுவதிலும்

உலகம் முழுவதிலும்

தேசிய விண்வெளி சங்கத்துடன் (என்.எஸ்.எஸ்) இணைந்து சான் ஜோஸ் மாநில பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் உள்ள 12 கிரேட் மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஓடும் ரயில், பிரசவ வலி, மருத்துவ மாணவர், வாட்ஸ்ஆப் க்ரூப், நடந்தது என்ன.?

Best Mobiles in India

Read more about:
English summary
Chennai boy won the NASA ‘Moon’ Prize for proposing an elevator from Earth to the moon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X