சென்னையில் ஆசஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர்!!

|

ஆசஸ் இந்தியா, கம்பியூட்டர் நிறுவனங்களில் முன்னனி பிராண்ட்களில் ஒன்றாகும். புதுமையான தொழில்நுட்பம் மற்றும் மக்களுக்கு புதுமையான கம்பியூட்டர் அனுபவத்தை அளிக்கும் இந்நிறுவனம் தனது இரண்டாவது எக்ஸ்குளூசிவ் ஸ்டோரை இன்று திறந்துள்ளது.

இந்த புதிய ஸ்டோரில் ஆசஸ் நிறுவனத்தின் அல்ட்ராபுக், நோட்புக், நெட்புக், டேப்லெட் மற்றும் பேப்லெட் என அனைத்தும் கிடைக்கும். இந்த புதிய ஸ்டோரின் அட்ரஸ் #G2, KAJ பிளாஸா, #838, அண்ணாசாலை, சென்னை-600 002.

புதுமைகள், குவாலிட்டி, சிறந்த சேவை மற்றும் குறைந்த விலையில் தரமான பொருள் என இது போன்ற விஷியங்களில் ஆசஸ் நிறுவனம் முதன்மையில் உள்ளது. இப்பொழுது இந்நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் எண்ணத்தில் உள்ளது. தனது ரீடெய்ல் ஸ்டோர்களை சிறு நகரங்களிலும் தொடங்க இது திட்டமிட்டுள்ளது.

சென்னையில் ஆசஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர்!!

டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேலிக்கட், கோவா, தானே, ராய்பூர், பில்லை, துர்காபூர், கான்பூர், கொச்சின், மைசூர், புனே, கோயம்பத்தூர், சென்னை என இந்தியாவின் இன்னும் பல நகரங்களிலும் ஆசஸ் நிறுவனத்தின் ஸ்டோர்கள் உள்ளன.

சென்னையில் நடந்த இன்றைய திறப்பு விழாவில் ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் ரீஜனல் தலைமை அதிகாரி- தெற்க்கு ஆசியா மற்றும் கன்ட்ரி மேனேஜர் திரு.பீட்டக் ஜாங் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் சென்னை மக்கள் ஆசஸ் நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பை தருகின்றனர் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தங்களது சேவையை சென்னை மக்களுக்கு மேலும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்னையில் இரண்டாவது ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். இந்நிறுவனத்தின் அனைத்து சாதனங்களும் இந்த புதிய ஸ்டோரில் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X