Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'IT' துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் 5 பெண்கள்!

Posted by:
Updated: Wednesday, February 13, 2013, 13:23 [IST]

ஒரு காலத்தில் வீட்டுக்குள்ளே முடக்கப்பட்டிருந்த பெண்கள், இன்று அனைத்து துறைகளிலும் சிறந்துவிளங்குகின்றனர். அதிலும் IT துறையில் ஆண்களைவிட பெண்களுக்கே 'மதிப்பு' அதிகமென்கின்றனர்.

ஒரு அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில், IT துறையில் பணியாற்றுபவர்களில் 57 விழுக்காட்டினர் பெண்களே என்கிறது அந்த ஆய்வு.

இத்துறையில், பிசினஸ்ஸில் மட்டுமல்லாது தொழில்நுட்பரீதியாகவும் சிறந்து விளங்குகின்றனர் என்பதே தனிச்சிறப்பு.

நாங்கள் இங்கே, IT துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் அல்லது சம்பாதிக்கும் 5 பெண்களை வரிசைப்படுத்தியுள்ளோம். தொகுப்பு கீழே!

ஜூலி லார்சன் கிரீன்:

IT துறையில் தொழில்நுட்பரீதியில் சிறந்துவிளங்கும் இவர் பல வருடங்களாகவே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்தான் பணியாற்றிவருகிறார்.

இவர் 2 டிகிரிகளை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷுவல் C++ன் ப்ரோக்ராம் மேனேஜராக வாழ்க்கையை தொடங்கியவர், இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான, இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் மற்றும் ஆபீஸ் மென்பொருள்களின் தலைமை வடிவமைப்பாளராக உள்ளார்!

லிண்டா டிமிச்சில்:

ஜாவா சார்ந்த தொழில்நுட்பத்தில் புலியான இவர், ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா EEல் தலைமை வடிவமைப்பாளராக உள்ளார். JSR 220, EJB மற்றும் ஜாவா API வடிவமைப்புகளிலும் இவரின் பங்களிப்பு முதன்மையானதே!

இவர் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் Ph.D வாங்கியவர் என்பது கூடுதல் தகவல்.

மரிசா மேயர்

பார்ப்பதற்கு சினிமா ஹீரோயின் போல தோற்றமளிக்கும் இவர் சாதாரண பெண்மணியே அல்ல. சாதனைகளை குவிப்பதற்காகவே பிறந்தவர் என பலராலும் புகழப்படுபவர். சில மாதங்களுக்கு முன்பு, யாஹூ நிறுவனத்தில் கிடைத்த CEO பொறுப்பிற்காக, தனது கூகுள் வேலையை தூக்கி வீசியவர்.

உலகின் 500 இளம் CEOக்கள் பட்டியலில் ஐவரும் இருக்கிறார். 1999ல் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், இன்று பல நிலைகளையும் தொட்டுள்ளார்.

 

உர்சுலா பர்ன்ஸ்:

இவர் எக்ஸிராக்ஸ் நிறுவனத்தின் CEO பொறுப்பை 2009லும், அதன் சேர்மன் பொறுப்பை 2010லும் ஏற்றவர்.

ஆபிரிக்காவை சேர்ந்த பெண்மணி இவ்வளவு பெரிய பொறுப்புகள் வகிப்பது இதுவே முதல் முறையாம்.

1992ல் முதன்முதலில் அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்நிறுவனத்தின் சேர்மன் ஆனார் என்பது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் பயன்தான்.

 

Jocelyn Goldfein

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஜினியரிங் துறையின் தலைவராக வழங்கும் இவர், ஃபேஸ்புக் வெளியிடும் அனைத்து புதிய சேவைகளின் வடிவமைப்புகளை கையாள்வதும் இவர்தானாம்.

ஃபேஸ்புக் பணியில் இணைவதற்கு முன்னர், VMware நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

இவரும் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலுக்கான பட்டம் பெற்றவர்.

 

Story first published:  Wednesday, February 13, 2013, 13:22 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll