Just In
- 1 hr ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 2 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 3 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 3 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உங்கள் ஸ்மார்ட்போனை சேதாரத்தில் இருந்து காப்பாற்ற சில முக்கிய டிப்ஸ்கள்
ஒரு ஸ்மார்ட்போனை பூவைப் போன்று மென்மையாக கையாள வேண்டும்.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் போன் அழைப்புகாக மட்டுமின்றி ஒவ்வொரு மனிதனின் இன்றியமையாத தேவையாகவும் மாறிவிட்டது. குறைந்தது சராசரியாக ஒவ்வொருவரும் 4 மணி நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறோம்.
அது அழைப்புக்காகவோ, எஸ்.எம்.எஸ், அனுப்புவதற்காகவோ, சமூக வலைத்தளங்கள், டிக்கெட் புக் செய்ய, ஷாப்பிங் செய்ய, ஆப்ஸ்கள் டவுண்லோடு செய்ய, வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய என பலவிதங்களிலும் ஸ்மார்ட்போன் உதவுகிறது.
மொபைல் போன் என்பது ஒருவரை தொடர்பு கொள்ள மட்டுமே என்ற நிலை மாறி தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்துமே நம்முடைய பாக்கெட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டர் எந்த அளவுக்கு பயன்படுகிறதோ அதற்கு இணையாக அனைத்து பணிகளுக்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தபடுகிறது.
புகைப்படங்கள், வீடீயோக்களை எடுத்து சேவ் செய்வது, முக்கியமான டாக்குமெண்ட்களை பத்திரப்படுத்தி வைப்பது, ஏன் ஏடிஎம் பின் நம்பர்களை கூட ஒருசிலர் ஸ்மார்ட்போனில்தான் சேமித்து வைத்துள்ளனர். எனவே இன்றைய நிலையில் ஒரு ஸ்மார்ட்போன் இல்லாமல் நீங்கள் வெளியே செல்ல முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை
இந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட ஸ்மார்ட்போனை நாம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம் என்பது குறித்து எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? நம்முடைய கவனக்குறைவாலும் எதிர்பாராத விதத்தாலும் ஸ்மார்ட்போன் சேதம் அடைய நிறைய வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு ஸ்மார்ட்போனை எப்படி எல்லாம் பாதுகாப்பாக வைத்து கொள்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
கவனமாக கையாள வேண்டும்:
ஒரு ஸ்மார்ட்போனை பூவைப் போன்று மென்மையாக கையாள வேண்டும். அதே நேரம் ஸ்க்ரீன் பாதுகாப்பு இல்லாத ஸ்மார்ட்போனை கீழே அல்லது மேஜை மிது வைக்கும்போது கரடுமுரடான இடத்தில் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் ஸ்க்ரீன் ஸ்க்ராட்ச் ஆக வாய்ப்பு உள்ளது. வீடு என்றால் ஸ்மார்ட்போனை ஒரே இடத்தில் வைத்து பழக்குவது நன்று.
பாதுகாப்பான உறை முக்கியம்:
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்கும் பலர் ஒருசில நூறுகள் கொடுத்து பாதுகாப்பான கவர் வாங்க யோசிப்பார்கள்.விலை உயர்ந்த ஸ்மார்ட்போனுக்கு நிச்சயம் ஒரு பாதுகாப்பான பாலிகார்பனேட் உறை மிக முக்கியம்.
இந்த வகை கவர்கள் உங்கள் ஸ்மார்ட்போன்களை கீழே விழுந்தால் பாதுகாப்பது மட்டுமின்றி டூயல் ஸ்வைப் செய்யவும் உதவுகிறது. டூயல் ஸ்வாஇப் மூஅல்ம் ஸ்க்ரீன் இரண்டு பகுதிகளாக தெரியும். அழைப்புகள் வரும்போது கவரை ஓப்பன் செய்யாமலேயே அழைப்பை எடுக்கவோ அல்லது மறுக்கவோ செய்யலாம்
தற்போது சந்தைக்கு வரும் பெரும்பாலான போன்களில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் வசதி உள்ளது. இவ்வகை வசதியுள்ள ஸ்மார்ட்போன்களை வாங்கிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை.
ஆனால் ஒருவேளை வாட்டர் ரெசிஸ்டெண்ட் இல்லாத போனாக இருந்தால் மிக மிக கவனமாக தண்ணீர் படாமல் பார்த்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்
டிஸ்ப்ளே ரொம்பம் முக்கியம் பாஸ்
ஒரு மொபைல் போனுக்கு உயிர்நாடியே அதன் டிஸ்ப்ளேதான். டிஸ்ப்ளே போய்விட்டால் அந்த போன் கிட்டத்தட்ட குப்பைதான். எனவே டிஸ்ப்ளேவுக்கு எந்தவித சேதாரமும், குறிப்பாக உடைந்துவிட்டாதபடியோ, அல்லது ஸ்க்ராட்ச் ஆகாதபடியோ பார்த்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. சிறு கவனக்குறைவால் மிகப்பெரிய செலவை வைத்துவிடுவது இந்த டிஸ்ப்ளேதான் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்ப்ளேவை பாதுகாத்து கொள்ள ஒரே வழி ஸ்க்ரின் புரொடக்டர் என்ற டெம்பர் கண்ணாடிதான். ஒவ்வொரு மாடலுக்கும் என்று தனியாக டெம்பர் கிளாஸ் இருக்கும்.
நம்முடைய மாடலுக்கு பொருத்தமான டெம்பர் கிளாஸை வாங்கி போட்டுக்கொண்டால் கவனக்குறைவாக கீழே இழுந்தாலும் டெம்பர் கிளாஸ் மட்டுமே சேதம் அடையும். எனவே ஒரு ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை டெம்பர் கிளாஸ் வாங்க வேண்டியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்கெட்டில் போனை மட்டும் வைக்கணும் மக்களே!
ஸ்மார்ட்போனை நமது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது அதே பாக்கெட்டில் சாவி, சில்லரை காசுகள் உள்பட வேறு பொருட்களை வைக்காமல் இருப்பது டிஸ்ப்ளேவை ஸ்க்ராட்சில் இருந்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி காசையோ அல்லது சாவியையோ எடுக்கும்போது ஸ்மார்ட்போன் பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடாமலும் பாதுகாக்க உதவும்
சார்ஜ் செய்வதையும் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க
வீடியோ பார்ப்பது, இண்டர்நெட்டில் உலாவுவது ஆகியவை காரணமாக ஸ்மார்ட்போனில் மிக வேகமாக சார்ஜ் காலியாகிவிடும் ஆபத்து உள்ளது. எனவே ஒரு ஸ்மார்ட்போனில் சார்ஜ் ஏற்றி வைத்து கொள்வது என்பது மிக முக்கியம்
ஆனால் அதே நேரத்தில் பிளக் சுவிட்சை பார்க்கும்போதெல்லாம் சார்ஜ் ஏற்ற கூடாது. அதிகமாக சார்ஜ் ஏற்றுவதும் அடிக்கடி சார்ஜ் ஏற்றுவதும் மொபைல் போனின் ஆயுளை குறைத்துவிடும். காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது ஃபுல் சார்ஜ் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள், பின்னர் அடுத்து எப்போது சார்ஜ் மிகக்குறைவான அளவில் இருக்கின்றதோ, அந்த நேரத்தில் மீண்டும் சார்ஜ் செய்தால் போதும். அனேகமாக ஒரு நாளைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் இரண்டு முறை மட்டும் சார்ஜ் செய்து வந்தால் ஸ்மார்ட்போனின் ஆயுள் நீடிக்கும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470