Just In
- 7 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 8 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 8 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 9 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆதார் அட்டைக்கு பல்பு கொடுக்க வருகிறது ஐரிஸ் ஸ்கேனிங் மொபைல்கள்.!
ஆதார் தோல்வியை போக்க கருவிழி ஸ்கேனிங் மொபைல் உபகரணங்கள் இந்தியாவில் வருமா?
ஸ்மார்ட்போன்களில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வைத்து பாதுகாப்பை வலுப்படுத்தியதை போலவே அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனின் கண்ணின் கருவிழி மூலம் மொபைல் போனை பாதுகாக்கும் வழிமுறை வரவுள்ளது.
இந்த கருவிழி பாதுகாப்பை மொபைல் போனுக்கு வழங்கும் நிறுவனம் தன் டெல்டா ஐடி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் இனி வருங்காலத்தில் ஆதார் அட்டை பதிவுக்கான கண்ணின் கருவிழிக்கும் உதவ உள்ளது. இதனால் ஆதார் அட்டையின் தரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தெலுங்கானா மாகாணத்தில் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் பாதுகாப்பு தோல்வி அடைந்தது. இதனால் தற்போது நாடு முழுவதும் டெல்டா ஐடி நிறுவனம் ஆதார் அட்டைக்காக பணிபுரிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டெல்டா ஐடி நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பிரபாகர் கூறியபோது, 'இந்தியாவின் 'உதய்' திட்டம் உள்ப்ட உலகின் பல பயோமெட்ரிக் பாதுகாப்பு பணிகளில் கண்ணின் கருவிழி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் கிடைத்த தோல்விகள் மூலம் பாடம் கற்ற நாங்கள் எதிர்காலத்தில் கருவிழி பாதுகாப்புடன் கூடிய மொபைல் போன் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்போம்' என்று கூறியுள்ளார்
அனைவரின் மனதிலும் எழும் இன்னொரு கேள்வி இந்த கருவிழி பாதுகாப்புடன் கூடிய மொபைல் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இருக்குமா? அல்லது பட்ஜெட் போன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்குமா? என்பதுதான். இதற்கு பதிலாக வருவது இதுதான்.
முதலில் பிங்கர் பிரிண்ட் சென்சார் என்பது உயர்வகை மொபைல் போன்களில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது ரூ.10000க்கும் குறைவான போன்களிலும் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. அதைபோலவே ஆரம்பத்தில் அதிக விலையுள்ள போன்களில் மட்டுமே கருவிழி பாதுகாப்பு வந்தாலும் விரைவில் பட்ஜெட் போனிலும் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ரூ.1500/-ஐ கையில் வைத்துக்கொள்ளுங்கள் : மலிவான 4ஜி போன்கள் ரெடி.!
ஆதார் அட்டைகளுக்கு உதவக்கூடிய கருவிழி பாதுகாப்பு கருவிகள் தற்போது அதிக விலையில் உள்ளது. ஆனால் டெல்டா ஐடி இந்த செலவை மிகப்பெரிய அளவில் குறைக்கும் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் சாம்சங் நிறுவனம் தனது முதல் கருவிழி பாதுகாப்புடன் கூடிய டேப்ளட்டை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருவிழி டெக்னாலஜி வெகுவிரைவில் மொபைல் போன்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எல்.ஜி நிறுவனத்தின் அடுத்த மாடலான
எல்ஜி G6 மாடலிலும், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 மாடலிலும் இந்த டெக்னாலஜி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல் ஆதார் அட்டை உள்பட அரசு அடையாள அடையாள அட்டைகளிலும் இந்த பயோமெட்ரிக் கருவிழி படலம் டெக்னிக் வெகுவிரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பிங்கர் பிரிண்ட் சென்சாரில் பல நெகட்டிவ் அம்சங்களை சந்தித்த நிலையில் பயோமெட்ரிக் கருவிழி படலத்தில் அந்த நெகட்டிவ் அம்சங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கருவிழி படல முறைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினர்களுக்கும் ஒரே முறையான ரிசல்ட்டை தரும் வகையும் அமையும் என்பது இதன் கூடுதல் சிறப்பு
தற்போது நம் முன் நிற்கும் ஒரே கேள்வி இந்த டெக்னாலஜியை நமது அரசு எந்த அளவுக்கு சீக்கிரம் உபயோகப்படுத்த போகின்றது என்பதுதான். இந்த டெக்னாலஜியை இந்திய அரசு உபயோகப்படுத்த தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அதன் பின்னர் நாடு பயோமெட்ரிக் டெக்னாலஜியில் வல்லமை படைத்த நாடாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470